காலக்கிரமமாகத்தொகுக்கப்பட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள் | CHRONICLE

சபையில் பாபிலோனிய பழக்கவழக்கங்கள்
நிம்ரோத்
 தேவனுடைய திட்டத்தை முறியடிக்க சாத்தான் தெரிந்துகொண்ட பாத்திரம் நிம்ரோத். பழைய ஏற்பாடு எழுதப்பட்ட மூலமொழியாகிய எபிரேய மொழியில் இவன் பெயர் 'மாரட்'. இதன் பொருள் 'கலகம்'.
"இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்"(ஆதி 10:9).
இவன் மனிதரையும் மிருகங்களையும் வேட்டையாடும் பராக்கிரமசாலியாக இருந்தான். இவன் தேவனுக்கு விரோதமான பல செயல்களைச் செய்தான். நோவாவின் குமாரரில் ஒருவனான காமுக்குப் பிறந்தவன் கூஷ். இவன் மகன்தான் நிம்ரோத்; இவனும் இவன் சேனையும் நோவாவின் குமாரரில் ஒருவனான சேமுக்குக் கொடுத்திருந்த அசீரியா நாட்டிற்குள் படையெடுத்துச்சென்று அதைக்கைப்பற்றி நினிவே பட்டனத்தைக் கட்டினான். தேவன் பிரித்துக் கொடுத்திருந்த தேச எல்லைகளை மாற்றி இவன் கலகம் செய்ததால் 'கலகக்காரன்' என்ற பொருள்படும் 'நிம்ரோத்' என்ற பெயரைப் பெற்றான்
     அன்று அறியப்பட்ட மக்களையும் முழு உலகத்தையும் தன் ஆட்சிக்குள் கொண்டுவர திட்டமிட்டு செயல்பட்டான். இந்தத் திட்டத்தை செயல்படுத்த புதிய மதத்தையும் புதிய ஆட்சிமுறையையும் கொண்டுவந்தான். சிநெயார் சமவெளியில் பாபேல் என்ற பட்டணத்தைக் கட்டினான்(ஆதி 10.10). இதில் பாபேல் என்ற மிக உயரமான ஒரு கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தான்(ஆதி 11:4)

     பாபிலோனியர் நிம்ரோத்தை அரசனாகவும், கடவுளாகவும் மதித்து வணங்கினர். 'செமிராமிஸ்' என்ற பெண் தேவதை நிம்ரோதின் தாய் என்று கூறப்பட்டுள்ளது; இவள் இவனுடைய மனைவி என்றும் சில இடங்களில் வருகின்றது.
     பாபேல் என்பதற்கு எபிரேய வார்த்தை 'பாபிலு'; இதன் பொருள் 'குழப்பம்'; அதுவரை பூமியெங்கும் ஒரே மொழியாயிருந்ததை தேவன் இந்த இடத்தில் தாறுமாறாக்கினார்(ஆதி 11:5-9). சகல குழப்பங்களும் இந்த பாபேலில் இருந்தே உருவாயின.
     பாபிலோனில் கட்டப்பட்டுவந்த பாபேல் கோபுரம் மிக உயரமாக இருந்தது. ஆங்கிலத்தில் ZIGGURAT என்று அழைக்கப்படுகிறது. சுமார் 1000 கோபுரங்களடங்கிய கட்டிடமாக, வட்ட வடிவமான முறையில் உயரமாக பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட்டது.
செமிராமிஸ் என்ற பெண் தேவதைக்கு 'அஸ்தரோத்' என்ற பெயரும் உண்டு. 'அஸ்தரோத்' என்றால் 'கோபுரங்களை உண்டுபண்ணின பெண்' என்று பொருள். இவளுக்கு 'சைபெலி' என்பது மற்றொரு பெயர். இதன் பொருள் 'கோபுரங்களை சுமக்கிறவள்'. இவளுடைய தலையில் கோபுரம் போன்ற கிரீடம் வைக்கப்பட்டிருக்கும்.
     பாபேல் கோபுரத்தில் ஏழு பகுதிகள் அடங்கியிருந்தன; முதல் பகுதி விக்கிரக கடவுள்களுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோபுரத்தின் உச்சியில் சுமார் 60X80 அடி சதுரத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டிருந்தது. இது பெல்மொர்தாக் என்றும் மர்துக் என்றும் அழைக்கப்பட்ட 'பாகால்' என்ற கடவுளுக்கு கட்டப்பட்டது.
     இந்த கோவிலுக்குள் 12 ZODIAC SIGNS இருந்தன என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்; அதாவது மாயவித்தைக்குப் பயன்படும் 12 அடையாளங்கள் இந்தக் கோவிலுக்குள் வரையப்பட்டிருந்தன. இவைகளைக் குறித்து பின்பு பார்ப்போம்.
இந்தக் கோபுரம் மெய்தேவனுக்கு விரோதமான ஆராதனை முறைகளை கைக்கொள்ளும் விதத்தில் கட்டப்பட்டிருந்தது; எனவே நிம்ரோத் சிலை வணக்கத்தை, சிலை ஆராதனையை அறிமுகம் செய்யும் கருவியாக சாத்தானால் பயன்படுத்தப்பட்டான்.
     சிலை வணக்கம்-புதிய மதம்-புதிய ஆளுகை ஆகியவற்றை அறிமுகம் செய்து மெய்தேவ வழிபாட்டிலிருந்து பிரித்து மக்கள் சாத்தானை வணங்க வழிவகுத்தான்.
ஆதிசபை
     ப்போஸ்தல நடபடிகளில் சபையின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் காண்கிறோம். யூத பண்டிகையாகிய பெந்தெகொஸ்தே பண்டிகை நாளில் தீர்க்கதரிசன நிறைவேறுதலாக எருசலேமில் கூடியிருந்த சீடர்கள்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். பேதுரு எழும்பி பிரசங்கித்தான். வசனத்தைக் கேட்டவர்கள், மனந்திரும்பி திருமுழுக்குப் பெற்றனர். இதுவே திருச்சபையின் பிறந்தநாள், ஆரம்பநாள்.

இதைத் தொடர்ந்து இயேசுவின் நாமத்தில் அற்புத அடையாளங்கள் நடைபெற்றன. திருவசனம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன் பிரசங்கிக்கப்பட்டது. அனுதினமும் சபையில் ஏராளமானோர் சேர்ந்தார்கள்
அன்று அறியப்பட்ட உலகம் முழுவதும் இயேசுவின் நற்செய்தி பரவ ஆரம்பித்தது. பிசாசின் கிரியைகள் அழிக்கப்பட்டன. இது சாத்தானுக்குப் பிடிக்காதல்லவா? அவன் உபத்திரவத்தை கட்டவிழ்த்து விட்டான். கிறிஸ்தவர்கள் எல்லா இடங்களிலும் துன்புறுத்தப்பட்டனர்; கொலை செய்யப்பட்டனர்; மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டனர்.

ஆதிசபையில் உபத்திரவம்
ஏராளமான கிறிஸ்தவர்கள் இரத்த சாட்சிகளாக மடிந்தனர்; மதவெறியர்களும் , அரசியல் தலைவர்களும் கிறிஸ்து மார்க்கத்தை அழித்துவிட முயன்றனர். அன்று உலகை ஆண்ட ரோமப்பேரரசர்கள் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தி கொலை செய்தனர்; அவர்களில் சிலர்....
1.நீரோ(கி.பி.54-68)
     இவன் 16 வயதில் பேரரசனானான். 25 வயது முடிவதற்குள் தன் மனைவி ஆக்டேவியா, தாய், தன் சகோதரன் ஆகியோரை கொன்றான். ஒருநாள் ரோமபுரி தீப்பற்றி எரிந்தது. நெருப்பு வைத்தது நீரோ மன்னனே என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
கிறிஸ்தவர்களைப் பகைத்த நீரோ, இந்த நெருப்பை வைத்தது கிறிஸ்தவர்கள் என்று அநியாயமாய் குற்றம்சாட்டி, கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்திக் கொன்றான். கி.பி.67ல் அப்போஸ்தலனாகிய பேதுரு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார். பவுல் கி.பி.68ல் ரோமபுரியில் தலைவெட்டப்பட்டு மரித்தார். 2.டொமீஷியன்(கி.பி.81-96)
     தன் சிலையை வணங்க மறுத்த கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் துன்பப்படுத்தினான்; இவன் தன்னை 'யூப்பிட்டர்' என்னும் கடவுள் என்று பிரகடனம் பண்ணினான். இவனை வணங்க மறுத்த அப்போஸ்தலனாகிய யோவான் பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
3.ட்ராஜான்(கி.பி.98-117)
     கிறிஸ்தவனாயிருப்பது ரோம சட்டத்திற்கு முரண்பட்டது என பிரகடனம் செய்தான். இவன் ஆட்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்; இக்னேசியஸ் என்ற பரிசுத்தவான் மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டார்.
4.மார்கஸ் அரிலியஸ்(கி.பி.161-180)
     இவன் நாட்களில் கலோசியம் என்று அழைக்கப்பட்ட திறந்தவெளி கலையரங்கில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பசியுள்ள சிங்கம், புலிகளுக்கு இரையாக்கப்பட்டனர்; தலை வெட்டப்பட்டு மரித்தனர். போலிகார்ப், ஜஸ்டின் மார்டைர் ஆகிய பரிசுத்தவான்கள் கொல்லப்பட்டனர்.
5.செப்டிமஸ் செவரஸ்(கி.பி.202-211)
     இவன் தன் ஆட்சி காலத்தின் இரண்டாம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக சட்டம் இயற்றினான். இவன் நாட்களில் 'ஆரிஜன்' போன்ற கிறிஸ்தவ தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
6.மேக்ஸிமஸ்(கி.பி.235)

     இவன் நாட்களில் கிறிஸ்தவர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர்; உயிருடன் தீ வைத்துக்கொழுத்தப்பட்டனர்; ஒரே குழியில் 50, 60 சடலங்களைப் போட்டு மூடினான்.
7.டெசியஸ்(கி.பி.249)
     இவன் முன்சொல்லப்பட்ட எல்லா பேரரசர்களைக் காட்டிலும் அதிகமாய் கிறிஸ்தவர்களை துன்புறுத்தினான்; ஆனால் இவன் சில மாதங்களே ஆட்சி செய்ததால் இவன் முயற்சி அதிகம் பலிக்கவில்லை.
8.வெலேரியன்(கி.பி.257)
     இவன் நாட்களில் ஏற்பட்ட உபத்திரவத்தில் குறிப்பாக கார்த்தேஜ் பிஷப் சைப்பிரியன் என்ற சிறந்த வேத பண்டிதரும், எழுத்தாளருமான தலைவர் கொல்லப்பட்டார்.
9.ஆர்லியன்(கி.பி.274)
     இவனும் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தினான்.
10.டயக்ளீசியன்(கி.பி.303-310)
     இவன் நாட்களில் எல்லா வேத பிரதிகளையும் சேகரித்து தீயில் சுட்டெரிக்கும்படி சட்டம் இயற்றினான். கிறிஸ்தவனாயிருப்பது சட்டத்திற்கு புறம்பானது எனப் பிரகடனம் பண்ணினான். கிறிஸ்தவ ஆராதனைக் கூடங்களை ஆராதனை நடந்துகொண்டிருக்கும்போதே தீயிட்டு அழிக்கச் செய்தான்; ஏராளமான கட்டிடங்களும், மக்களும் அழிக்கப்பட்டனர்.

"கிறிஸ்தவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். நமது கடவுள்களின் ஆராதனை புதுப்பிக்கப்பட்டது" என்ற வாசகமுள்ள நாணயம் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது; கிறிஸ்தவ மூடநம்பிக்கை அழிக்கப்பட்டதற்கான ஞாபகார்த்த சின்னம் என்ற ஒரு ஸ்தூபியை எழுப்பினான்.

கிறிஸ்தவ சபையின் வளர்ச்சி
     உபத்திரம் எவ்வளவு பெருகினாலும் சபையின் வளர்ச்சி, கிறிஸ்தவர்களின் வளர்ச்சி குன்றவில்லை, குறையவில்லை. இந்த உபத்திரவகால முடிவில் ரோம சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள்தொகை சுமார் 120 மில்லியன்(12 கோடி) என்று கணக்கிடுகின்றனர். இதில் பாதிப்பேர், அதாவது 60 மில்லியன்(6கோடி) கிறிஸ்தவர்கள் என்று குறிப்பு கூறுகிறது.
சாத்தான் திருச்சபையை உபத்திரவத்தினால் அழிக்கமுடியாது என்று கண்டுகொண்டான். கிறிஸ்தவர்களை காலிபண்ண பிசாசு அதிக நயவஞ்சனையான முறையைக் கையாண்டான்; கிறிஸ்தவர்களைக்கொண்டே கிறிஸ்தவத்தை அழிக்கத் திட்டமிட்டான்.
கான்ஸ்டன்டைன்
     ரோமப் பேரரசரான இவன் கிறிஸ்தவர்களின் உறுதியையும், உண்மையையும் கண்டு பிரமித்தான். ஒருநாள் பிரகாசமான ஒரு சிலுவையை தரிசனத்தில் கண்டான். "இந்த அடையாளத்தில் ஜெயம் பெறு" என்ற சத்தத்தையும் கேட்டான். கான்ஸ்டன்டைன் வெற்றி பெற்றான். கிறிஸ்தவனானான்; கிறிஸ்து மார்க்கத்தின் பாதுகாவலன் என்று தன்னை பிரகடனப்படுத்தினான்.
கி.பி.324ல் அரசாங்கத்தையும் திருச்சபையையும் ஒன்றாக இணைத்தான். திருச்சபைக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஏராளமான சலுகைகளை அள்ளி வழங்கினான்; சபைப் போதகர்களுக்கு ஆலயங்களைக் கட்டுவதற்கு அரசாங்க கருவூலத்திலிருந்து ஏராளமான பணம் கொடுக்கப்பட்டது. கிறிஸ்து மார்க்கம் அரசாங்க மார்க்கமாயிற்று. சபைத் தலைவர்களுக்கு 'பசிலிக்கா'(BASCILICA) என்ற மிக ஆடம்பரக் கட்டிடங்கள் வழங்கப்பட்டன. இதிலே மதமாற்றங்களுக்கான சடங்குகள் நடைபெற்றன.
கிறிஸ்தவர்களுக்கு இதுவரை இருந்த உபத்திரவம் நீங்கி, கிறிஸ்தவனாயிருபபது பெரிய சிலாக்கியமாயிற்று. திரளான மக்கள் கிறிஸ்தவர்களாக மாறினர்; அரசாங்க சலுகைகளைப் பெறவும், உயர்பதவி பெறவும் கிறிஸ்தவர்களாயினர். பணத்திற்காக, வசதியான வாழ்விற்காக சபைப்போதகர்களாக மாறினர்.
சபைக்கு ஏற்பட்ட சரிவு
     கிறிஸ்தவம் உலகமெங்கும் வேகமாய்ப் பரவினாலும், சபை தன் புனிதத் தன்மையை கொஞ்சங் கொஞ்சமாய் இழக்க ஆரம்பித்தது; மனந்திரும்பாதவர்கள், கிறிஸ்துவை உண்மையாய் ருசியாதவர்கள், கிறிஸ்துவினால் அழைக்கப்படாதவர்கள் பல்வேறு பிற காரணங்களுக்காக பிரசங்கியார்களாய், சபை மேய்ப்பர்களாய் பொறுப்பேற்றனர்.

எனவே பரிசுத்த ஆவியின் வல்லமை குன்றியது; பண வல்லமை மேற்கொண்டது; பிரசங்க முறைகள் சொற்பொழிவுகளாக மாறின; வேத வசனம் மறக்கப்பட்டது; சபைகள் முழுவதும் மனந்திரும்பாத மக்களால் நிறைந்தது.
சபையின் எல்லா பணத்தேவைகளும் அரசாங்கத்தால் பூர்த்தி செய்யப்பட்டன. அநேக பிற மத வழிபாட்டுத்தலங்கள் கிறிஸ்தவ ஆலயங்களாக்கப்பட்டன. பிற மதத்தினரை சபைக்குக் கொண்டுவர அவர்களின் பழக்கவழக்கங்களை சபைக்குள் கொண்டுவந்தனர். பிற மதத்திலிருந்த சகல மூடப்பழக்க வழக்கங்களும் சபையின் சடங்குகளாய் மாறின.
     வேதத்தின் அடிப்படை சத்தியங்கள் போதிக்கப்படவில்லை; எனவே எவை அடிப்படை சத்தியங்கள், எவை கிறிஸ்தவத்திற்கு முரண்பட்டவை என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இயேசுவின் திருச்சபை எல்லா மூடப்பழக்க வழக்கங்களையும் கைக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
     பாபேல் கோபுரம் கட்ட முயற்சித்து தோற்றுப்போன நிம்ரோத், பின்பு கொல்லப்பட்டு அகால மரணமடைந்ததாக பாபிலோனிய சரித்திரம் கூறுகிறது. நிம்ரோத்தினுடைய மரணத்தால் வேதனைப்பட்ட மக்கள் அவனுக்காக துக்கம் கொண்டாட ஆரம்பித்தனர். நிம்ரோத்தின் மற்றொரு பெயர் 'தம்மூஸ்'; தம்மூஸுக்காக அழுதார்கள் என்று எசேக்கியேல் 8:14ல் வருகிறது.

     தங்களுக்குப் பெயர் உண்டாக்க பாபேல் கோபுரம் கட்ட முயன்றவர்களுடைய மொழியை கர்த்தர் தாறுமாறாக்கினபடியால் அவர்கள் அவ்விடம் விட்டு பூமியின் பல பாகங்களுக்கும் சிதறிப்போக ஆரம்பித்தனர்; அவர்களோடு அவர்கள்

     பாபிலோனிய கலாச்சாரமும், மதச்சடங்குகளும், மத நம்பிக்கைகளும் கூடவே சென்றன.
     செமிராமிஸ் என்ற தேவதை, அவள் மகன் நிம்ரோத், இவர்கள் இருவரையும் பாபிலோனியர் வணங்கினர்; செமிராமிஸ் தேவதை நிம்ரோத்தை அற்புதமாக பெற்றெடுத்தாள்; இவனே ஆதி.3:15ல் சொல்லப்பட்டுள்ள ஸ்திரீயின் வித்து என்றும் நம்பினர்; செமிராமிஸ் 'அல்மாமேட்டர்' என்று அழைக்கப்பட்டாள்; இதன் பொருள் 'கன்னித்தாய்'.
இவள் 'வானத்தின் ராணி'(QUEEN OF HEAVEN) என்றும் அழைக்கப்பட்டாள். எரேமியா 44:15-19, 24-27 வசனங்களில் 'வானராக்கினி' என்று அழைக்கப்படுகிறவள் இவளே. யூதர்களும் இவளுக்கு தூபங்காட்டி, பலிகளைச்செலுத்தினர். அப்படி செய்ததினால் தங்களுக்கு ஆசீர்வாதம் கிடைத்தது என வாதாடினர்.
     திருச்சபையில் திரளான மக்கள் வந்து சேர்ந்தபோது, தாங்கள் முன்பு பின்பற்றிய பழக்கவழக்கங்களையும் சபைக்குள் கொண்டு வந்தனர். புறஜாதி மக்களை சபைக்குள் கொண்டுவர அவர்கள் பழக்கவழக்கங்களை கிறிஸ்தவ சடங்குகளாய் மாற்ற சபைத் தலைவர்களும் ஆர்வம் காட்டினர்.
மரியாள் வணக்கம்
     பாபிலோனியரும், எகிப்தியரும் வணங்கிவந்த வானராக்கினியின் ஸ்தானத்தை புனிதத்தாயாகிய மரியாளுக்குக் கொடுக்க ஆரம்பித்தனர். இயேசுவின் தாய் என்ற தலைப்பு மங்கி, "கடவுளின் தாய்" என்ற பட்டம் உயர்ந்தது. இதுவரையிலும் மரியாளைப்பற்றி எதுவும் சொல்லாதிருந்த சபையார் மரியாளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.
     கி.பி 431இல் எபேசு பட்டணத்தில் நடந்த திருச்சபை ஆலோசனைக் கூட்டத்தில் மரியாளை கடவுளின் தாய்(MOTHER OF GOD) என்று அழைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதுவரையிலும் இயேசுவை மட்டும் வணங்கிவந்தவர்கள், இதிலிருந்து மரியாளையும் வணங்க ஆரம்பித்தனர்.

வசனத்திற்கு முரண்பட்ட பழக்கவழக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
*கி.பி300
மரித்தவர்களுக்காக ஜெபம்
*கி.பி300
சிலுவை அடையாளத்தை முக்கியப்படுத்துதல்; தம்மூஸ் என்ற வார்த்தையின் முதல் எழுத்தாகிய 'T' என்ற எழுத்து பாபிலோனிய மந்திரங்களின் அடையாள குறியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதையே சற்று மாற்றி சிலுவை வடிவமாக்கி, சிலுவை அடையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர். *கி.பி.375  மரித்த பரிசுத்தவான்களையும், தேவதூதர்களையும் வணங்க ஆரம்பித்தல். *கி.பி.394
தூப ஆராதனையோடு கூடிய பூஜைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.
*கி.பி.431
மரியாள் வணக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
*கி.பி.500
சபை அங்கத்தினரின் ஆடையைவிட சபைக் குருவானவரின் உடை மாற்றியமைக்கப்பட்டது.
*கி்.பி.593
உத்தரிக்கும் ஸ்தலம் பற்றிய உபதேசம் அறிமுகப்படுத்தப்பட்டது.
*கி.பி.600
ஆராதனைகள் லத்தீன் மொழிகளில் நடத்தப்பட ஒழுங்கு செய்யப்பட்கது. மரியாளிடம் வேண்டிக்கொள்ளுதல் அறிமுகப்படுத்தப்பட்டது; மரித்த பரிசுத்தவான்களிடம் வேண்டிக்கொள்ளுதல் ஆரம்பிக்கப்பட்டது.
வெளி.2:1-7 வசனங்களில் எபேசு சபைக்குக் கொடுக்கப்பட்ட செய்தி: எபேசு சபை ஆதி அன்பை இழந்த சபையாக கூறப்பட்டுள்ளது. வெளி.2:8-11 சிமிர்னா சபைக்குறிய செய்தி: இது உபத்திரவ கால சபைக்கு அடையாளம்.
வெளி.2:12-17 வசனங்களில் பெர்கமு சபைக்குறிய செய்தி: 'பெர்கமு' என்றால் 'திருமணம்' என்று பொருள். திருச்சபை உலகத்துடன் தன்னை இணைத்துக்கொண்ட உறவுக்கு அடையாளமான சபை. இந்த சபையில் நிக்கோலாய் மதப் போதனைகளும், பிலேயாமின் போதனைகளும் ஊடுருவி இருந்தன. இதே நிலையில்தான் கி.பி.மூன்றாம் நூற்றண்டிற்குப்பின் சபைக்குள் பாபிலோனிய பழக்கவழக்கங்கள், ஆராதனை முறைகள் நுழைந்தன.

*கி.பி.650
மரியாளைக் கனப்படுத்த பல பண்டிகைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
    இந்த CHRONICLE'ஜ வாசிக்கும் கத்தோலிக்க நண்பர்களுக்கு எழுத விரும்புவது, நீங்கள் மரியாளை மதிப்பது போலவே நாங்களும் மரியாளை புனிதமான தாயாக மதிக்கின்றோம். உலகில் பிறந்த எந்தப்பெண்ணையும்விட மரியாள் இயேசுவை பெற்றெடுத்ததின்மூலம் சிறப்பான சிலாக்கியமுடையவள் என நம்புகிறோம். ஆனால், இயேசு கிறிஸ்து ஒருவரே மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். அவர் ஒருவரே ஆராதனைக்குரியவர் என்பது சத்தியம்.

சபைத்தலைவர் ஆண்டவராக உயர்த்தப்படல்
பாபிலோனிய போப்புகளின் உணமையான மகா சபை(GRAND ORIGINAL COUNCIL OF PONTIFFS) என்ற அமைப்பு ஒன்று இருந்தது. இதன் தலைவர் "The SOVEREIGN PONTIFF OF BABYLON" என்று மதிக்கப்பட்டார். அதாவது "கடவுளின் தெய்வீகத் தன்மை வாய்ந்த போப் என்றும் இவர் தவறு செய்ய இயலாதவர்" (INCAPABLE OF ERROR) என்றும் மதிக்கப்பட்டார். உயர்வட்டார குருக்கள்முதல் இவரை தொழுது கொண்டார்கள்
இந்த பாபிலோனிய பழக்கவழக்கங்களே திருச்சபைக்குள்ளும் நுழைந்தது. ஆரம்ப நாட்களில் ஆதி சபையினர் வீடுகளில் கூடி ஆராதித்தனர்; பாடல்கள் பாடி, ஜெபித்து, சாட்சிகூறி, சங்கீதம் வாசித்து ஆராதனை செய்தனர். ஒவ்வொரு வீட்டுக் குழுக்களும் தங்கள் காரியங்களை தாங்களே பார்த்துக் கொண்டனர். இந்த வீட்டு சபைகளிலே மூப்பர்கள் பொருப்பாளர்களாக இருந்தனர். இப்படி பல வீட்டு சபைகளை மேற்பார்வை செய்தவர்களை பிஷப் என்று அழைத்தனர்.
'பிஷப்' என்பதன் பொருள் 'மேற்பார்வையாளர்'. பல நாடுகளிலும் சபை வேகமாய் பரவினது. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் ரோம சாம்ராஜ்யத்திலிருந்த 120மில்லியன் (12 கோடி) மக்களில் பாதிப்பேர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டனர் என ஒரு குறிப்பு கூறுகிறது.
கான்ஸ்டன்டைன் என்ற ரோமப் பேரரசன் கிறிஸ்தவனாக மாறியபின் சபையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. பேரரசன் திருச்சபையின் தலைவனாகவும் செயல்பட ஆரம்பித்தான். சபைக்கு பல சட்டதிட்டங்களை இயற்றினான். சபைகளுக்குள் பல சபைகளுக்குள் ஒரு அமைப்பு உண்டாக ஆரம்பித்தது.இந்த சபை அமைப்புகள் தங்களை 'கத்தோலிக்க சபை' என்று அழைத்தனர். 'கத்தோலிக்' ஏன்றால் 'அகில உலகம்' என்று பொருள். அதாவது 'பல நாடுகளிலும் பரவியுள்ள சபை' என்று பொருள்.
இந்த அமைப்பில் இணையாத பல சபைகளும் சுயாதீனமாய் இயங்கி வந்தன. சபையில் அங்கத்தினராக வேணடுமானால் சபை ஏற்படுத்தியுள்ள விசுவாசப் பிரமானங்களுக்கு உட்பட வேண்டும் என்ற விதி உருவானது. குருமார்களுக்கும் சபை அங்கத்தினர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உண்டாக்கப்பட்டது. குருமார்கள், ஆசாரியர்கள்(PRIESTS) என்று அழக்கப்படலாயினர்.சபையின் மேற்பார்வையாளர்களாயிருந்த பிஷப்மார் சபைகளை ஆளுகை செய்ய ஆரம்பித்தனர். பிஷப்களை கட்டுப்படுத்துவது யார் என்ற கேள்வி எழுந்தது. பெரிய பட்டனங்களிலிருந்த, பிஷப்கள், மெட்ரோபாலிடன்ஸ்(கூட்டு தலைமைக்குழு தலைவர் அல்லது மேட்டிரானியர்) என்று அழைக்கப்பட்டனர். பின்பு பேட்ரியார்க்ஸ்(கோத்திரப்பிதா அல்லது குடி முதல்வன்) என்று அழைக்கப்பட்டனர்.

இப்படிப்பட்ட தலைவர்கள் எருசலேம், அந்தியோகியா, அலெக்ஸாண்டிரியா, கான்ஸ்டாண்டிநோபிள், ரோம், ஆகிய பட்டணங்களிலிருந்தனர். இந்த ஐந்து தலைவர்களுக்குள்ளும் தங்களில் யார் அதிக அதிகாரமுடையவர் என்ற போட்டி எழுந்தது. கான்ஸ்டாண்டிநோபிள், ரோம் ஆகிய இரு பட்டண பிஷப்களுக்குள் அதிக போட்டி ஏற்பட்டது.     
உலகை ஆண்டுவந்த ரோமின் அதிகாரம் உயர்ந்ததாயிருந்தது. ரோமாபுரி சபையை உருவாக்கியவர்கள் அப்போஸ்தலராகிய பேதுரு, பவுல் என மதிப்பாக கூறப்பட்டது.  ரோமின் முதல் பிஷப் அப்போஸ்தலனாகிய பேதுரு. எனவே அவர் வழிவந்த ரோம் சபைத் தலைவரே எல்லா சபைகளுக்கும் தலைவர் என உறுதி செய்யப்பட்டது. நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் (மத்.16:18,19). நீ என் ஆடுகளை மேய்ப்பாயாக (யோ.21:15-17). இந்த இரண்டு வசனங்களும் பேதுருவின் உயர்ந்த அதிகாரத்திற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட்டன.
4ம் 5ம் நூற்றாண்டுகளில் போப் என்ற பதம் எந்த பிஷப்பிற்கும் உரியதாயிருந்தது. பின்பு ரோமாபுரியிலிருந்த சபையின் தலைவருக்கு மட்டுமே உரியதாயிற்று. 'போப்' என்ற வார்த்தையின் பொருள் 'அப்பா'


ஒன்றாம் லியோ (கி.பி.444-461) என்ற ரோமாபுரி சபைத் தலைவர் தனக்கு உயரிய அதிகாரம் உண்டு என்று கூறி மற்ற பிஷப்களுக்கு கட்டளை கொடுக்க ஆரம்பித்தார். இவர் பல இடங்களில் 'முதல் போப்' என்று அழைக்கப்பட்டதுண்டு.
சுமார் கி.பி.600ல் முதலாம் கிரிகரி(GREGORY 1.'The GREAT') என்பவர் முதல் அகில உலக பிஷப்பாகவும் , போப்பாகவும் முடிசூட்டப்பட்டார். இவர் சிலை வணக்கம், உத்தரிக்கும் ஸ்தலம், கர்த்தருடைய பயன்படுத்தப்படும் அப்பமும், இரசமும் ஜெபித்தவுடன் இயேசுவின் சரீரமாகவும் இரத்தமாகவும் மாறிவிடுகிறது என்ற கொள்கை (TRANSUBSTANTIATION) ஆகிய உபதேசங்களைக் கொண்டுவந்தார். இவர் ஒரு துறவி; துறவறத்தை அதிகம் வலியுறுத்தினார்.
போப்பின் அதிகாரம் படிப்படியாக உயர்ந்தது. போப்பின் அதிகாரத்திற்கு கீழ்படிந்து நடந்த அரசர்களும் உண்டு. எதிர்த்தவர்களும் உண்டு. கி.பி.1073-1216 வரை ஐரோப்பிய நாடுகளில் போப்கள் சர்வ அதிகாரமுடையவர்களாய் உயர்ந்து நின்றனர்.

ஹில்டபிராண்ட் என்ற போப்பைப்போல் அதிகாரத்துடனிருந்த போப் வேறு யாருமில்லை. இவர் அரசர்கள் போப்பை நியமிப்பதை நிறுத்தி, தலைமை பிஷப்புகள் சங்கம் (College of Cardinals) போப்பை தெரிந்துகொள்ளும் முறையை கொண்டு வந்தார். குருமார் துறவறம் மேற்கொள்ளவேண்டும் என்பதை கட்டாயமாக்கினார். போப்பே உலகத்தையும் சபையையும் ஆளவேண்டும் என்று கூறினார். போப் ஹில்டபிராண்ட் 20 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் கி.பி.1085ல் மரித்தார்.

இவருக்குப்பின் குறிப்பிடத்தக்க போப் மூன்றாம் இன்னசென்ட் (INNOCENT III). இவர் ஆட்சி செய்த காலம் கி.பி.1198-1216. 37வயதில் போப் பட்டத்திற்கு வந்து முழு உலகையும் ஆளுகை செய்வது போப்பின் அதிகாரம் என்று பிரகடனப்படுத்தினார்.

கி.பி.1303ல் 8ம் போனிபேஸ் (BONIFACE VIII) என்ற போப் பிரெஞ்சு தேச அரசனாயிருந்த பிலிப்பை சபையைவிட்டுத் தள்ளும் கட்டளையைப் பிறப்பித்தார். பிலிப் தன் படையை அனுப்பி போப்பை சிறைபிடித்து, மூன்று நாள் சிறையிலடைத்ததிலிருந்து போப்பின் அதிகாரம் குறைய ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து 70 ஆண்டுகள் பிரெஞ்சு தேச அரசர்களால் போப்மார்கள நியமிக்கப்பட்டனர். இந்தக் காலக் கட்டத்தில் போப்பின் இருப்பிடம் ரோமிலிருந்து பிரெஞ்சு தேச பட்டணமான அவிக்னனுக்கு(AVIGNON) மாற்றப்பட்டது.

கி.பி.1378ல் மறுபடியும் போப்பின் இருப்பிடம் ரோமுக்கு மாற்றப்பட்டது. ஆனால் பிரெஞ்சு தேச தலைமை பிஷப்கள் இன்னொரு போப்பை தேர்ந்தெடுத்தனர். 30 ஆண்டுகள் இரண்டு இடங்களில் இரண்டு போப்கள் ஆட்சி செய்தனர். இந்தப் பிரச்சனையை தவிர்க்க இந்த இரண்டு போப்கள் அல்லாமல் பொதுவான ஒரு போப்பை தெரிந்து கொண்டனர். ஆனால் முந்திய இரண்டு போப்புகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய மறுத்தனர். எனவே சிறிதுகாலம் மூனறு போப்புகள் ஒன்றுபோல் பதவியிலிருந்தனர்.

கி.பி.1414ல் கான்ஸ்டன்ஸ் என்ற பட்டணத்தில் சபையின் ஆலோசனை சங்கம் கூடியது. பதவியிலிருந்த அத்தனை போப்புகளையும் புறம்பாக்கி '5ம் மார்டின்' என்ற புது போப்பை தெரிந்தெடுத்தனர். கி.பி.1378லிருந்து போப்மார் ரோமில் தொடர்ந்து தங்கி வருகின்றனர். கி.பி.1870ல் இத்தாலி அரசன் ரோமையும் போப்பின் ஆளுகையிலிருந்த நாடுகளையும் தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தான். கி.பி.1929 பிப்ரவரி 11ம் தேதி இத்தாலி அரசுக்கும் வத்திக்கானுக்குமிடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்தாலி பிரதம மந்திரி முசோலினியும், கார்டினல் கேஸ்பாரியும் கையெழுத்திட்டனர். இவ்விதமாய் வத்திகான் என்ற சிறுநகரம் சுய ஆட்சியுடைய குறுநிலமாக மாறியது. சுமார் 109 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த சிறுநாடு தனிக்கொடி, தனி தபால்தலை, தனி ராணுவம், தனி குடியுரிமை ஆகிய சிறப்புகளையுடையதாய் விளங்குகிறது.

ரோமன் கத்தோலிக்க சபையின் குறிப்புகளிலிருந்து அறிவது:....
     ரோமன் கத்தோலிக்க சபை உலகிலுள்ள எந்த ஆளுகைகளுக்கும் அடிமைப்பட்டதல்ல. போப் திருச்சபையின் தலைவராயிருப்ததால் அவரே முழு உலகத்திற்கும் ராஜாதிராஜா. மனுக்குலத்தின் தலைவர். போப்மூலமாய் இயேசுகிறிஸ்து மாம்சத்தில் 'வெளிப்பட்டு ஆட்சி செய்கிறார். எனவே இப்போது உலகிலுள்ள இயேசுகிறிஸ்து போப் அவர்களே! போப் பேசினால் இயேசு பேசுகிறார் என்று பொருள். எனவே போப்பின் பேச்சை பரிசோதித்துப் பார்க்க யாருக்கும் உரிமையில்லை. கீழ்படிவதே நமது கடமை'. இதுவே அவர்கள் உறுதியாய் நம்புவது. எனவே போப் 'போப் ஆண்டவராய்' உயர்த்தப்பட்டார்.

மத் 16:16-20ல் இயேசு பேதுருவைக் குறித்து சொன்ன காரியங்களை அடிப்படையாகக் கொண்டதே தங்கள் கொள்கை எனக் கூறுகின்றனர்.

ஆதித் திருச்சபையின் முதல் தலைவர் பேதுருவா?
     இயேசு பேதுருவைப் பார்த்து...
     "நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்... பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும் பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்"(மத் 16:16-19)
இதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்
     பேதுரு என்பதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை 'பெட்ரோஸ்'. இந்த கல்லின்மேல் என்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை 'பெட்ரா'. பெட்ரோஸ் என்றால் 'கல்' என்று பொருள். 'பெட்ரா' என்றால் 'பெரிய பாறை'. நீ சிறு கல்லாயிருக்கிறாய்; இந்த பெரிய பாறையின்மேல் என் சபையைக் கட்டுவேன் என்று இயேசு கூறினார். இந்தப் பெரிய பாறை யார்?; இயேசுகிறிஸ்துவே.
     "அந்தக் கன்மலை கிறிஸ்துவே"(1கொரி.10:4; ரோமர் 9:33). 
"மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்"(1பேதுரு 2:4).
     (இதை எழுதிய பேதுரு நானே அந்தக் கல் என்று சொல்லவில்லை)
"இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்"(எபே.2:20) 
     "அவர்மேல்(இயேசுவின்மேல்) மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு... 
அவர்மேல்(இயேசு) நீங்களும்... கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்"(எபே.2:21,22).
     எனவே திருச்சபை  இயேசுகிறிஸ்துவின்மேல் கட்டப்பட்டு வருகிறது; பேதுருவின்மேல் அல்ல. பெந்தெகொஸ்தே நாளில் திருச்சபை ஆரம்பமானபோது பேதுருவை தேவன் பயன்படுத்தினார். பேதுருவின் பிரசங்கத்தினால் 3000 பேர் மனந்திரும்பி திருச்சபைக்குள் சேர்க்கப்பட்டனர்.
     "இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்ற பேதுருவின் அறிக்கையின்மேல் திருச்சபை கட்டப்படுகிறது என்றும் வேத பண்டிதர் விளக்கம் கொடுக்கின்றனர்.  
"அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்" (எபே.2:20) என்று பவுல் குறிப்பிடுகிறார். அதாவது அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் இயேசுவே தேவகுமாரன் என்று அறிக்கையிட்ட விசுவாச அறிக்கையின்மேல் திருச்சபை கட்டப்படுகிறது. 
     பேதுருதான் முதல் போப்  என்றும், அவர் ரோமில் 25 ஆண்டுகள் பதவியிலிருந்தார் என்றும் கூறப்படும் கருத்துக்கு வேத ஆதாரமுமில்லை, சரித்திர ஆதாரமுமில்லை. 
     பேதுருதான் முதல் போப் என்றால் இவர் திருமணமானவர் என்றும், அவர் தம் மனைவியை ஊழியத்திற்குப் போன இடங்களுக்கெல்லாம் கூட்டிச் சென்றார் என்றும் வேதம் கூறுகிறது(மத்.8:14; 1கொரி.9:5). சமாரியாவில் ஏற்பட்ட எழுப்புதலைக் கேள்விப்பட்ட எருசலேம் சபையார் பேதுருவையும், யோவானையும் சமாரியாவிற்கு அனுப்பினர்.(அப் 8:14). 
     பேதுரு சபைக்குக் கட்டுப்பட்டு நடந்தாரேயல்லாமல், சபைக்கு தலைவராக செயல்படவில்லை. சபையின் தூண்களாக யாக்கோபும், பேதுருவும், யோவானும் கருதப்பட்டனர்(கலா.2:9). அப்போஸ்தலரில் ஒருவர்தான் பேதுரு; சபைக்குத் தலையானவர் கிறிஸ்துவே(எபே.5:23) 
     "கண்காணியானவன் (பல சபைகளை மேற்பார்வை செய்பவர்) ஒரே மனைவியை உடைய புருஷனாக இருக்க வேண்டும்"(1 தீமோ.3:2). 'கண்காணி' என்பதற்கு ஆங்கிலத்தில் 'பிஷப்' என்று வருகிறது. திருமணம் செய்யக் கூடாது என்று பவுல் எழுதாமல், ஒரு மனைவியுடன் நல்வாழ்க்கை வாழ்பவனாக இருக்க வேண்டும் என்று எழுதுகிறார். ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதற்கும், ஒன்றுமே வேண்டாம் என்பதற்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது.
     பவுல் இதைத் தொடர்ந்து எழுதும்போது பிற்காலங்களிலே தவறான கொள்கைகளை அந்த பொய்யர் கட்டளையிடுவார்கள் என்று குறிப்பிடுகிறார். 
"விவாகம் பண்ணாதிருக்கவும்"(1 தீமோ.4:2) 
இந்த இரண்டு வார்த்தைகள் மட்டும் ஒரு வசனமாக குறிக்கப்பட்டுள்ளது கவனத்திற்குறியது. 
"மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள். 
விவாகம் பண்ணாதிருக்கவும்... அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்"(1 தீமோ.4:1-3).

துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரீகள்

     இந்தப் பழக்கமும் பாபிலோனிலிருந்து வந்ததே. கி.பி.320ல் அந்தோணி என்பவர் உலக பற்றுகளிலிருந்து விடுபட்டு தனித்து வாழ ஆரம்பித்தார்; இவர் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தார்; இவரின் நல்வாழ்க்கை ஆயிரக்கணக்கானோரைக் கவர்ந்தது; இவர் எகிப்திலுள்ள ஒரு குகையில் வாழ்ந்துவந்தார்; இவரைப் பின்பற்றி அனேகர் துறவறத்தை விரும்ப ஆரம்பித்தனர். ஏராளமானவர்கள் இவரின் சீடராய் மாறினர். இதன்மூலம் பல நன்மைகளும் ஏற்பட்டன; தீமைகளும் ஏற்பட்டன.|துறவறத்தை வலியுறுத்திய சரித்திரத்தை இரண்டாகப் பிரிக்கலாம். கி.பி.385ல் சிரிகஸ்(Siricus) என்பவர் துறவறத்தை வலியுறுத்தி ஓர் கட்டளை பிறப்பித்தார்; அது 7ம் கிரிகரி காலம் வரை ஓரளவு கடைபிடிக்கப்பட்டது; ஆனால் கண்டிப்பாக கடைபிடிக்கப்படவில்லை.
     போப் 7ம் கிரிகரி கி.பி.1073ல் பதவிக்கு வந்தார் ; இவருக்கு ஹில்டபிராண்ட் என்ற பெயரும் உண்டு; இவர் ஆண்ட காலம் கி. பி.1073-1085.  இவர் பதவிக்கு வந்தவுடன் குருக்கள் கண்டிப்பாய் சந்நியாச வாழ்க்கை வாழ வேண்டும் என்று சட்டம் இயற்றினார்; இதுவரை திருமணம்பண்ணி குடும்பம் நடத்திக் கொண்டிருந்த பாதிரிமார்கள் கட்டாயமாக மனைவி, பிள்ளைகளைவிட்டு பிரிக்கப்பட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன; இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பாதிரிமார்களின் மனைவிகளில் பலர் தற்கொலை செய்து கொண்டனர்; ஏராளமான பேர் மனநிலையில் பாதிக்கப்பட்டு வியாதியுற்றனர்.
     மனைவி, பிள்ளைகளைவிட்டு பிரியாத பாதிரிமார்களின் பூஜையில் சபையார் கலந்து கொள்ளக்கூடாது என்று போப் கட்டளையிட்டார். சபையாரும் இதை வரவேற்றனர். மனைவியைவிட்டுப் பிரியாத பாதிரிமார் நடத்திய திருமுழுக்கு ஆராதனைகள், கர்த்தருடைய பந்தியை ஏராளமான சபை மக்கள் புறக்கணித்தனர்.
     கி.பி.1073க்கு பின்புதான் திருமணமான பாதிரிமாருக்கு குருப்பட்டம்(Ordination) மறுக்கப்பட்டது.
...>>(தொகுப்பு நூல் : "உபதேசங்கள் பலவிதம்";(முதல் பாகம்),ஆசிரியர்:P.S.ராஜமணி;தொடர்புமுகவரி:100,நாவலர் நகர்,மதுரை -625 010.

கி.பி.1517-நவம்பர் 1: மார்டின் லூத்தர் வேதாகம வசனங்களை ஆதாரமாக வைத்து தனது 95 கோட்பாடுகளை 'விட்டன்பரோ' ஆலயக்கதவில் பதித்தார்.
     (வாடிகனில் அலங்காரமான புனித பீட்டர் தேவாலயம் கட்டுவதற்கு அதிகப்பணம் தேவைப்பட்ட காரணத்தினால் போப் 2ம் ஜூலியஸ் கட்டளைப்படி 'டெட்சல்' என்ற கத்தோலிக்க மதகுரு மக்களிடம், பணம் கொடுத்து போப்பாண்டவர் அனுமதித்த இந்த பாவமன்னிப்புச் சீட்டு வாங்கினால், நீங்கள் செய்த, செய்து கொண்டிருக்கிற, எதிர்காலத்தில் செய்யப்போகிற எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு எரி நரக தண்டனையிலிருந்து தப்பி மோட்சமடையலாம்; அதுமட்டுமல்ல செத்துப்போன உங்கள் உறவினர்களும் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து (மோட்சத்திற்கும், நரகத்திற்கும் இடைப்பட்ட இடம்) மோட்சம் போவார்கள் என்று கூறி பாவ மன்னிப்பு சீட்டு வியாபாரத்தை பெரிய அளவில் நடத்தி அதிகப் பணம் திரட்டினார்.
     டெட்சல் 1517-ல் சாக்ஸனிக்கு வந்தார். சாக்ஸன் பல்கலைக்கழக பேராசிரியராயிருந்த மார்டீன் லூத்தர் விட்டன்பர்க் ஆலய பொருப்பையும் சேர்த்து கவனித்துக்கொண்டுவந்தார். இவர் டெட்சலின் பாவமன்னிப்பு சீட்டு வியாபாரத்தை வன்மையாக கண்டித்தார். மார்ட்டின் லூத்தர், மக்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, பாவத்தை இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு வாழ்ந்தாலே மோட்சம்; வேதாகமமே இறைவனை அடைய ஒரே வழி என்றார். போப்பின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட எண்ணினார். தனது 95 கோட்பாடுகளை விட்டன்பரோ ஆலயக் கதவில் ஒட்டி யாரோடு வேண்டுமானாலும் வாதுக்கு தயார் என்றார். போப் அதிர்ச்சியுற்றார். லூத்தரை மத விலக்கம் செய்தார். போப்பாண்டவர் ஆணையை லூத்தர் முச்சந்தியில் தீயிட்டுக் கொளுத்தினார். ஜெர்மன் முழுவதும் போப் மார்க்கத்திற்கு எதிர்ப்பு வழுத்தது.
     லூத்தரை ஒழித்துக்கட்ட போப் பல முயற்சிகள் செய்தார். ஜெர்மன் அரசர்கள், பிரபுக்கள், குருமார்கள் சபை முன்னிலையில் 'வேர்ம்ஸ்' என்ன இடத்தில் கி.பி.1552ல் தம் கொள்கைகளை கைவிட மறுத்தார். லூத்தரை பேரறிஞர் ஃபிரடெரிக், மற்றும் பல இளவரசர்கள் ஆதரித்ததாலும், ஜெர்மனி முழுவதும் இவருடைய கொள்கைகள் தீவிரமாய் பரவியதாலும், முகம்மதிய படையெடுப்பு நிகழ்ந்ததாலும் போப்பாண்டவரால் லூத்தரை ஒன்றும் செய்ய முடியவில்லை. வட ஜெர்மினி், டென்மார்க், நார்வே, சுவீடன் ஆகிய இடங்களிலும் தீவிரமாய் பரவினது. ஜெர்மினி முழுமையிலும் இவ்வாறு எதிர்த்துப் போரிட்டதால் இதற்கு 'புரோட்டஸ்டண்டு' எனப்பெயர் வந்தது. லூத்தர் துறவியாய் இருந்து பிறகு திருமணம் செய்து வாழ்ந்து கி.பி.1546ல் இறந்தார்.)

கி.பி.1528-வில்லியம் டிண்டேல் கிரேக்க மொழியிலுள்ள புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதற்காக இவர் கொல்லப்பட்டார்.
(அந்த காலத்தில் ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் மாத்திரமே வேதாகமத்தை படிக்க முடியும்; மற்றவர்கள் யாரும் வேதாகமத்தை தொடவும் கூடாது, படிக்கவும் கூடாது என்ற நிர்பந்தம் இருந்தது. பரிசுத்த வேதாகமத்தின் பரிசுத்தம் தீட்டுப்பட்டுவிடும் என்று காரணம் கற்பித்தார்கள்)

கி.பி.1534-மேலாண்மைச் சட்டம் கொண்டு வந்ததின் மூலம் 8-ம் ஹென்றி மன்னர், இங்கிலாந்து திருச்சபையின் தலைவரானார்.

கி.பி.1551-இராபர்ட் ஸ்டீவன்ஸ் என்பவர் வேதாகமத்தின் ஒரு பகுதியான புதிய ஏற்பாட்டை வசனங்களாக பிரித்தார்.

கி.பி.1554-டியூடர் வம்சத்து டியூடர் மேரி இங்கிலாந்தின் அரசியானார்.
(புரோட்டஸ்டாண்டார் இவரை 'இரத்த வெறி பிடித்த மேரி' என்கின்றனர். இலண்டன் பிஷப் ரிட்லி, காண்டர்பெரி பிஷப் கிராமர், இலார்ஸ்டர் பிஷப் இலாட்டிமர் இம்மூன்று பேரும் உயிரோடு நெருப்பு வைத்து கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கான புரோட்டஸ்டாண்டு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்)

கி.பி.1558-முதலாம் எலிசபெத் இங்கிலாந்து அரசியாதல்

கி.பி.1582-போப்பாண்டவர் 8-ம் கிரகோரி புதுவிதமான கிரகோரியன் ஆண்டினை அறிமுகப்படுத்தினார்.(இப்போதுள்ள ஆங்கில ஆண்டு)

கி.பி.1600-இந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய வியாபாரக் கம்பெனி நிறுவப்பட்டது.

கி.பி.1609-கலிலியோ கலிலீ டெலஸ்கோப்பை கண்டுபிடித்தார்.

கி.பி.1543ல் போலந்து நாட்டு வானவியலார் கோப்பர்னிக்ஸ், பூமி உருண்டை என்று கண்டுபிடித்தார். இவருக்குப் பிறகு இத்தாலியைச்சேர்ந்த கலிலியோ கலிலீ 30 மடங்கு உருப்பெருக்கிக் காட்டும் டெலஸ்கோப்பை உருவாக்கினார். கோப்பர்னிக்ஸ் போலவே கலிலியோவும் பூமி உருண்டை என்றும், பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்றும், சூரியன் பூமியைச் சுற்றிவரவில்லை என்றும் கூறினார்; இதனால் இவரை 7 ஆண்டுகள் சிறையில் தள்ளியது ரோமன் கத்தோலிக்க மதம்; ஏனெனில் இவர் கூறியது மத விரோதமாம். அக்காலக் கட்டத்தில் ரோமன் கத்தோலிக்க மதமே ஐரோப்பிய அரசியலில் கொடிகட்டி பறந்தது.
     கலிலியோ இறந்ததும் அவரது உடலை பொதுவான கல்லறையில் அடக்கம் செய்ய ரோமன் மத குருக்கள் அனுமதி மறுத்தனர். மக்கள் நடமாட்டம் இல்லாத வனாந்தரத்தில் அடக்கம் பண்ணப்பட்டார்; இவர் இறந்து 360 ஆண்டுகளுக்குப் பின்னர் 1992 அக்டோபர் 30ம் நாள்தான் ரோமன் கத்தோலிக்கம் கலிலியோவின் கூற்று உண்மை என்று ஒப்புக்கொண்டது. பிறகு வனாந்தரத்தில் இவரது கல்லறையை தோண்டி எலும்புகளை எடுத்து கல்லறை தோட்டத்தில் வைத்தனர்.
     கோப்பர்னிக்ஸ், கலிலியோ, மெகல்லன் போன்றோர் கூறுவதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே(கி.மு.760-750களில்) "அவர் பூமி உருண்டையின் வீற்றிருக்கிறவர்" என்று ஏசாயா 40:42 எனற பைபிள் வசனம் தெளிவாக கூறியிருப்பது பரிசுத்த வேதாகமம் என்றும் மாறாதது என்பதை நிரூபிக்கவே செய்கிறது. "பைபிளும், இயற்கையும், கடவுளின் சொல்லால் உருவானவை, பைபிள் பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்டது" என்று கூறியவர்தான் இந்த கலிலியோ.

      சுமார் கி.மு.2000ல் பாபேல் கோபுரத்தை கட்டிய நிம்ரோது காலத்தில் விக்கிரக ஆராதனை உலகில் தோன்றியதாக கருதப்படுகிறது. இவன்தான் பாபிலோனியாவைக் கட்டினான்.
     நிம்ரோத்தின் மனைவி பெயர் 'செமிராமிஷ்' என்பதாகும். இந்த நிம்ரோது இறந்தபின் வேசித்தனத்தின் மூலமாக செமிராமிஷ்க்கு பிறந்த மகன் 'தம்மூஸ்' ஆகும். செமிராமிஷ் சர்வாதிகாரமுள்ள ராணியாக இருந்தமையால் அக்கால பாபிலோனிய மக்கள் அவளையும் அவள் மகன் தம்மூஸையும் கடவுள் என்று வழிபட ஆரம்பித்தனர். பின்னாளில் இந்த விக்ரக வணக்கம் பல்வேறு பாகங்களில் அறியப்பட்டு பலவித பெயர்களால் அழைக்கப்படுகிறது. 'அஸ்த்தரோத்' 'பாகால்' என்று கானானிலும், 'இஸிஸ்', 'ஹோரஸ்' என்று எகிப்திலும் 'ஜுபிடர்' என்று ரோமாபுரியிலும் 'அப்ரோடைட்' 'ISHTAR' என்று கிரேக்கத்திலும் வழங்கியது.
இவ்வாறாக 'செமிராமிஷ்'-வான ராணியாகவும் அவளது மகனும் வணங்கப்படும் பழக்கம் பரவியது. இது பண்டைய ரோமாபுரியில் வேர் கொள்ளவே, இது பாபிலோனிய மார்க்கத்திற்கு தலைநகராயிற்று. இந்த பாபிலோனிய மார்க்கத்து பிரதான ஆசாரியன்(பூசாரி) 'பாண்டிபெக்ஸ் மாக்ஸிமஸ்'(Pontifex Maximus) என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டான். பின்பு இப்பட்டம் ஜூலியஸ் சீஸருக்கு வழங்கப்பட்டு ரோமப் பேரரசர் கான்ஸ்டன்டைன் வரை சூட்டப்பட்டது. கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவத்தை ரோமப்பேரரசின் மதமாக பிரகடனப்படுத்தினான். அதற்கு பிறகு ரோமன் கத்தோலிக்க போப்மார்கள் இப்பட்டத்தைச் சூட்டிக்கொண்டனர்.
இதனால் கிறிஸ்துவின் போதனைகளோடு பாபிலோனிய இரகசியங்கள் கலந்தமையால் கிறிஸ்தவத்தின் மூலநீரூற்று களங்கப்பட்டது. பாபிலோனிய சடங்காச்சாரங்கள் கிறிஸ்தவ சபைக்குள் நுழையும்போது கன்னி மரியாளின் தொழுகை வழிபாடு ஆரம்பித்தது. ரோமன் கத்தோலிக்க பிரபல திருவிழாக்கள் அனைத்துமே பாபிலோனிய மார்க்கத்தின் ஆரம்பத்தோற்றத்தை உடையவையே. ஈஸ்டர் என்னும் பெயர் கிறிஸ்தவ வேத அடிப்படையில் ஏற்பட்டதல்ல. பாபிலோனிய மார்க்கத்திலே வான ராணிக்குத்தான் ஈஸ்டர்(ISHTAR) என்பதாகும்.
பழைய பாபிலோனின் 'இரகசியத்தையே' ரோமன் கத்தோலிக்கம் கையாண்டு வருகிறது. உலகமெங்குமுள்ள எந்த கத்தோலிக்க ஆலயங்களிலும், அலுவலகங்களிலும் 'மரியாளின் சிலையை' காணலாம். கத்தோலிக்க சபை மரியாளை "வான ராணி", "தேவ தாய்", "சபையின் தாய்", "உலகின் ராணி" எனவும் விளம்புகிறது. ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் இயேசுவின் தாயாருக்கு அப்பேர்பட்ட பட்டங்கள் உள்ளதாக கூறப்படவில்லை.


 இப்படியாக கி.பி.519ல் ஈஸ்டர் பண்டிகையயென்று இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கொண்டாடுகிறோம் என்று கூறிக்கொண்டு பாபிலோனிய இஸ்டார் என்ற தேவதையை நினைவு கூற ஆரம்பித்தார்கள். இது பழைய ஏற்பாட்டு வேதாகமத்திலே (நியா 2:13;10:6, 1 சாமு 7:3,4; 12:10, 1ராஜா 11:33 வசனங்களில்) 'அஸ்தரோத்து' என்று அழைக்கப்படுகிறது.

     தம்மூஸ் என்ற நிம்ரோத் மனைவி செமிராமிஷ் பெற்ற மகன் நினைவாகத்தான் ஏறக்குறைய 25 பேர் பரிசுத்தமான தேவாலயத்திலே அழுது கொண்டிருந்ததாக எசேக்கியேல் தீர்க்க தரிசனத்தில் சொல்லுகிறார்(எசேக்கியேல் 8:14-16) இதை வைத்துதான் கத்தோலிக்க சபையினர் இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூறுகிறோம் என்று சொல்லிக்கொண்டு லெந்து நாட்கள் என்று சொல்லித் தொழுகைநாட்கள் கட்டளையாக பிறப்பிக்கப்பட்டது. கத்தோலிக்க மதத்திலே அனுசரிக்கக்கூடிய ஜெபமாலை முறையும் பாபிலோனிய அடிப்படை மார்க்கமே ஆகும். 
     வேதாகமமானது சிலுவை சின்னத்தை வணங்கவோ அடையாளமாக வைத்துக்கொள்ளவோ கட்டாயப்படுத்தி கூறவே இல்லை. TAMUS என்கிற வார்த்தையின் முதல் எழுத்தான T என்ற எழுத்தை கல்தேயரும், எகிப்தியரும் மந்திர எழுத்தாய் வைத்திருந்தனர். T-யில் ஏதோ மந்திரசக்தி இருப்பதாக பாபிலோனியர் எண்ணிக்கொண்டு அந்த T வடிவத்தில் சிலுவையை செய்துகொண்டு வணங்கவும் உற்சாகப்படுத்தப்பட்டார்கள்; இதுவும் பாபிலோனிய மார்க்கமேயாகும். R.C சாமியார்கள் திருமணம் செய்யாமல் தனியராக, பிரம்மச்சரிய விரதம் ஏற்றுக்கொண்டு பூஜைகள் நடத்த ஆரம்பித்தனர்; சாமியார் மடங்கள், கன்னிமாட வாசம் ஏற்படுத்தப்பட்டன. இந்த விரதம் பூண்ட சாமியார்களையும், கன்னியர்களையும் தேவதா கன்னிகைக்கு ஒப்பாக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் என்று சொல்லி அவர்களை கனம் பண்ணத்தொடங்கினார்கள். இதற்கு வேதத்தில் எந்தவித ஆதாரமும் கிடையாது; இரகசியம் மகா பாபிலோன்.

போப் மார்க்கம் ஒரு கண்ணோட்டம்
     போப் என்றால் தந்தை என்று பொருள். திருச்சபையின் தொடக்கக் காலத்தில் போப் என எவரும் அழைக்கப்படவில்லை. கி. பி.4ம் நூற்றாண்டுக்கப்பால் போப் என்றால் ரோம் நகரத்து பிஷப்பிற்கு உரிய பதவி பெயராகிவிட்டது. போப் 7ம் கிரகோரி (கி.பி.1073-85) போப் என்ற சொல் திருச்சபையின் தலைவரான ரோம் நகர் பிஷப்பைக் குறிக்கும் என்ற திட்டவட்டமான அறிவிப்பை வெளியிட்டார். கி.பி.8ம் நூற்றாண்டில் போப்பிற்கு அச்சுறுத்தலை கொடுத்த லம்பாடியர்கள் என்ற முரட்டு இனத்தவரை பிரான்ஸ் மன்னன் 3ம் பெப் தோற்கடித்து விரட்டி, ரோம் நகரிலும் அதை சுற்றியுள்ள அம்ரியா, மார்ச்சஸ், ரோமக்னா ஆகிய பகுதிகளை போப்பிற்கு தானமாக கொடுத்தான். போப் அப்பகுதிகளின் மன்னன் என அழைக்கப்பட்டார்.
     பத்தொம்பதாம் நூற்றாண்டில் கரிபால்டி தலைமையில் இத்தாலியை ஒரே நாடாக ஒருங்கிணைக்கும் முயற்சி நடைபெற்றபோது போப்பின் நாடுகள் பிடுங்கப்பட்டு ஐக்கிய இத்தாலி உருவானது. எனவே இத்தாலி தேசிய அரசிற்கும் போப்பிற்கும் இடையில் 50 ஆண்டுகாலம் நல்லுறவு நிலவவில்லை. 1929ல் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி போப்புடன் லாட்ரன் உடன்படிக்கை செய்துகொண்டார் அதன்படி போப் ரோம் நகரின் மையத்திலுள்ள வாடிகன் என்ற பகுதியின் சுதந்திர மன்னர் என்றழைக்கப்பட்டார். இதன்மூலம் போப் எந்தவொரு நாட்டிற்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக செயல்பட வழி ஏற்பட்டது.
     சுதந்திர நாடு என்ற நிலையில் இந்தியா உட்பட பல நாடுகளோடு தூதரக உறவு கொண்டுள்ளது. போப்பின் தூதர் அப்போஸ்தலிக் புரோனொன்சியோ எனப்படுகிறார். கான்ஸ்டான்டிநோபிளை தலைநகரமாகக் கொண்ட பைசாண்டிய பேரரசின் கிறிஸ்தவம் கி.பி.8-ம் நூற்றாண்டில் போப்பின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து தனித்திருச்சபையானது. அது வைதீகத் திருச்சபை எனப்பட்டது. இன்று ரஷ்யா, கிரேக்கம், பல்கேரியா, யுகோஸ்லாவியா, ஆகிய நாடுகளில் வைதீகத் திருச்சபைதான் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
     கி.பி.726-ல் கான்ஸ்டாண்டிநோபிள் பேரரசரான 3வது லியோ புனிதர்களின் சொரூபங்களை வணங்குவது விக்கிரக ஆராதனை. எனவே சொரூபங்களை ஆலயங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும் என கட்டளையிட்டார். கி.பி.1378ல் இரண்டு போப்பாண்டவர்கள் இருந்தனர். பிரான்ஸ், காஸ்டைல், ஆரகான்(ஸ்பெயின்) ஸ்காட்லாந்து, பிளாண்டிஸ் நாடுகள் போப் 7ம் சாந்தப்பரை ஆதரித்தன. இங்கிலாந்து ஜெர்மினி, ஹங்கேரி நாடுகள் போப் அர்பனை ஆதரித்தன. இப்படிப்பட்ட பல குழப்பங்களும், பதவிப் போட்டிகளும்,  ஆடம்பரங்களும் போப் மார்க்க சரித்திரத்தில் அநேகம் உண்டு. வாடிகனின் மொத்த பரப்பளவு 109 ஏக்கர்; மக்கள் தொகை 1000 ஆண்கள் மட்டுமே. பெரும்பாலானோர் குருக்கள் மற்றும் சமயம் சார்ந்த அதிகாரிகள் ஆவார்.
     கரோல் வோஜ்டிலா என்ற இயற்பெயர் கொண்ட போப் இரண்டாம் ஜான்பால் கி.பி.1978ல் அக்டோபர் 22ல் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; போப்பாக பதவி ஏற்கும் முதல் ஸ்லாவ் இனத்தவர், முதல் போலந்து நாட்டுக்காரர் என்ற பெருமை இவருக்கு உண்டு; 20 ஆண்டுகளில் 117 நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். 1986லும், 2001லும் இரண்டுமுறை இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.
     இவரது மறைமுக முயற்சியால் போலந்தில் கம்யூனிச ஆட்சி வீழ்ந்தது. அதேபோல் பாராகுவேவில் ஆல்பிரட் ஸ்ட்ரோஸ்னர், சிலியில் அகஸ்டோ பினோசெ, பிலிப்பைன்சில் பெர்டினன்ட் மார்கோஸ், போன்ற சர்வாதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அதனால் உற்சாகமடைந்த எதிர்ப்பாளர்கள் அவர்களது ஆட்சிகளை வீழ்த்தினர் என்பது வரலாறு. 1981ல் மெஹ்மத் அலி என்ற துருக்கியனால் சுடப்பட்டார் எனினும், தப்பி பிழைத்தார். இவர் காலத்தில்தான் வாடிகன் இஸ்ரேல் நாட்டோடு ராஜீயத் தொடர்பு கொண்டது. வாடிகன் இன்றைய நிலையிலும் உலகின் முக்கிய அரசியல் சக்தியாக விளங்குகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
...>>(தொகுப்பு நூல்:"உலக தோற்றம் முதல் உலக அழிவுவரை"; எழுதியவர்:S.செல்வராஜ்_Grace House, கள்ளக்குறிச்சி) 

இஸ்ரவேல் தேசம்
aஆபிரகாம் காலத்தில்
b.யோசுவா கலத்தில்
c.ராஜாக்கள் காலத்தில்
d.இயேசுவின் காலத்தில்
e.தற்போதைய காலத்தில்
a.ஆபிரகாம் காலத்தில் இஸ்ரவேல் தேசம்
     ஆபிரகாம் காலத்தில் இஸ்ரவேல் தேசம் கானான் என்று அழைக்கப்பட்டது. கானானியரும், பெலிஸ்தியரும் அங்கு குடியிருந்தார்கள்.
     கானான், காமின் 4வது மகன்; இவருடைய பெயர் அந்த தேசத்திற்கு வழங்கப்பட்டது. கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணின தேசம் கானான். அதற்கு முன் ஆபிரகாம் மொசப்பொத்தோமியாவிலுள்ள ஊர் என்ற கல்தேயருடைய பட்டணத்தில் இருந்தார். தற்போது இந்த இடம் ஈராக் என்று அழைக்கப்படுகிறது.
b.யோசுவா காலத்தில் இஸ்ரவேல் தேசம்
யோசுவா 12,13 அதிகாரங்கள்

     லேவி கோத்திரத்தார் ஆண்டவருக்கு என்று பிரித்தெடுக்கப்பட்டார்கள். எனவே அவர்களுக்கு இஸ்ரவேலின் நடுவே சுதந்திரம் இல்லை. யோர்தானுக்குக் கிழக்கே ரூபன், காத், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், யோர்தானுக்கு மேற்கே மற்ற 9.1/2 கோத்திரங்களுக்கும் சுதந்தரம் கிடைத்தது.(சிமியோன், யூதா, செபுலோன், இசக்கார், தாண், ஆசேர், நப்தலி, எப்பிராயீம், பென்யமீன், மனாசேயின் பாதிக்கோத்திரம்)
     கானான் தேசத்தை இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்தபின் இஸ்ரவேல் தேசமாக மாறிவிட்டது.
C.ராஜாக்கள் கலத்தில் இஸ்ரவேல் தேசம்.
     யோசுவாவிற்குப் பிறகு தேசத்தில் இராஜாக்கள் இல்லை. நியாதிபதிகள் தேசத்தை நியாயம் விசாரித்தார்கள். சாமுவேல் தீர்க்கதரிசி காலத்தில் தேவன் சாமுவேல் மூலமாக சவுலை ராஜாவாக ஏற்படுத்தினார்
ü  இஸ்ரவேலின் முதல் இராஜா=சவுல். பென்யமீன் கோத்திரம்ம்; தகப்பன் பெயர் கீஸ்.
ü  இரண்டாவது இராஜா=தாவீது; யூதா கோத்திம்; தகப்பன் பெயர் ஈசாய்.
ü  மூன்றாவது இராஜா=சாலொமோன். யூதா கோத்திரம்; தகப்பன் பெயர் தாவீது. இந்த 3ராஜாக்களும் சமஸ்த இஸ்ரவேல் மேலும் இராஜாக்களாய் இருந்தனர். பின்பு தேசம் பிரிக்கப்பட்டது. சவுலின் கீழ்ப்படியாமையினிமித்தம் தேவன் இராஜ்யபாரத்தை தாவீதுக்குக் கொடுத்தார். தாவீது தேவனின் இருதயத்திற்கு ஏற்றவனாய்க் காணப்பட்டான். தாவீதுக்குப் பிறகு அவன் மகன் சாலொமோன் இராஜாவானான். அவன் கர்த்தரின் கட்டளைகளின்படி வாழாதபடியினால் அவன் குமாரனாகிய ரெகொபெயாம் காலத்தில் யூதா, இஸ்ரவேல் என்று பிரிக்கப்பட்டது. அதில் யூதா தேசத்திற்கு கர்த்தர் தாவீதின் நிமித்தம் சாலொமோனின் மகன்(ரெகொபெயாம்) இராஜ்யபாரம்பண்ண அநுக்கிரகம் செய்தார்.

d.இயேசுவின் காலத்தில் இஸ்ரவேல் தேசம்.
     இஸ்ரவேல் தேசம், கலிலேயா, சமாரியா, யூதேயா என 3 பிரிவாக இருந்தது. ரோமர்கள் ஆட்சி செய்த காலத்தில் யூதா யூதேயாவாக மாற்றப்பட்டது; தலைநகர் எருசலேம்
இஸ்ரவேல் ஏன் சமாரியாவாக மாறியது?
     1இரா 16:23..... யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் 31ம் வருசம் இஸ்ரவேலின்மேல் உம்ரி ராஜாவாகி 12வருசம் ராஜ்யபாரம் பண்ணினான். அந்த நாட்களில் உம்ரி சமாரியா மலையை சேமேர் என்பவனிடமிருந்து 2தாலந்து வெள்ளிக்கு வாங்கி அதில் கோட்டை கட்டினான். அதில் ஒரு நகரத்தையும் கட்டி அதை இஸ்ரவேலுக்குத் தலை நகராக மாற்றினான். அந்தப் பட்டணத்துக்கு, அந்த மலையின் எஜமானாயிருந்த சேமேரின் பெயரின்படியே சமாரியா என்று பெயரிட்டான். 2இரா 17:15.... ஓசெயா ராஜாவின் ஒன்பதாம் வருசத்தில் அசீரியா ராஜா(அசீரியாவின் தலைநகரம் நினிவே பட்டனம்) சமாரியாவைப்பிடித்து இஸ்ரவேலரை அசீரியாவுக்கு சிறையாகக் கொண்டுபோனான். அப்பொழுது அங்கு புறஜாதிகள் வந்து இஸ்ரவேலில் குடியேரி்னர். அவர்கள் யூதர்களோடு கலந்து வாழ்ந்தார்கள். அங்குள்ளவர்கள் சமாரியர்கள் என அழைக்கப்பட்டனர். கலப்பின மக்களாகிய இவர்களை யூதர்கள் வெறுத்தனர். எனவே இவர்கள் தேவாலயத்தில் தொழுதுகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. 2இரா 17:41....மனாசே என்ற ஆசாரியன் கெரிசிம் மலையில் ஒரு தேவாலயத்தைக் கட்டி எருசலேம் தேவாலயத்தின் ஆராதனை முறைகளைக் கொண்டுவந்தான். ஆனாலும் யூதர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. சமாரியர் தேவனைக் கெரிசீம் மலையில் தொழுதுகொண்டு வந்தார்கள்(யோவா 4:20)
கலிலேயா:     கலிலேயா என்பது இஸ்ரவேலின் ஒரு பகுதி. கலிலேயா கடலின் அருகில் இருந்தபகுதி கலிலேயா என்று அழைக்கப்பட்டது. கலிலேயாவிலும் அநேக புறஜாதிகள் இஸ்ரவேலருடன் கலந்து வாழ்ந்தனர். அங்கு வாழ்ந்த இஸ்ரவேலரை கலிலேயர்கள் என்று அழைத்தனர். இவர்கள் படிப்பறிவு குறைந்தவர்கள்; எனவே இவர்களையும் யூதர்கள் வெறுத்தனர். அநேகர் மீன் பிடிக்கும் தொழில் செய்துவந்தனர்.
இயேசுவின் காலத்தில் இஸ்ரவேல் தேசம் ரோமர் ஆட்சியின் கீழ் இருந்தது.
ü  ரோம பேரரசர்கள் தங்களுக்கு கீழ் தேசாதிபதிகளை ஏற்படுத்தி ஆட்சி செய்தார்கள்.
ü  ரோம பேரரசர் எருசலேமை பிடித்தபின் யூதேயா ரோமர்கள் ஆட்சிக்குட்பட்டது.
ü  இஸ்ரவேல் ரோமர்களின் ஆட்சியின்கீழ் வந்தது.
ரோம பேரரசர் அந்திப்பார்தோர் என்பவரை கி.மு.47ல் தேசாதிபதியாக இஸ்ரவேல் தேசத்திற்கு ஏற்படுத்தினான்; இவன் இதுமேயா வம்சத்தைச் சேர்ந்தவன்; யூதன் அல்ல.
அந்திப்பார்தோரின் பின்பு அவன் மகன் மகா ஏரோது என்பவன் தேசாதிபதியாக வந்தான். இவன் கலிலேயா, சமாரியா, யூதேயா, பெரேயா என்ற இந்த 4 பகுதிகளையும் ஒன்றாக சேர்த்து யூதேயா என்று ஆட்சி செய்து வந்தான். யூதேயா என்றால் யூதர்களின் சீமை என்று அர்த்தம். இவன் காலத்தில் அகஸ்து ராயன் ரோம பேரரசனாக இருந்தான்.
மகா ஏரோது(கி.மு33-கி.பி 4)
Ø  இயேசு பிறந்தபொழுது தேசாதிபதியாக இருந்தவன்.
Ø  3 ஞானிகள்(சாஸ்திரிகள்) இயேசுவின் பிறப்பை இவனுக்கு அறிவித்தார்கள்.
Ø  இவன் 2வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொன்றவன்.
Ø  யூதர்களுக்கு கி.மு.20-10ல் தேவாலயத்தைக் கட்டினான்.
     இனுக்குப்பின் இவனின் பிள்ளைகள் தேசத்தை 4 பங்காக பிரித்து ஆட்சி செய்து ஆட்சிசெய்து வந்தார்கள். ஆகவே இவர்கள் கால்பங்கு தேசாதிபதிகள் என்று அழைக்கப்பட்டார்கள்.

இவர்கள் காலத்தில் திபேரியுராயன் ரோமபேரரசனாகவும், பிலாத்து தேசாதிபதியாகவும் இருந்தார்கள்.
v  ஏரோது அர்கிலேயு
ü  யூதேயா, சமாரியாவின் கால்பங்கு தேசாதிபதி.
ü  இவன் காலத்தில் யோசேப்பு(இயேசுவின் வளர்ப்புதகப்பன்) யூதேயாவிற்கு வரபயந்து கலிலேயாவில் வந்து தங்கினான்.
v  ஏரோது அந்திப்பா
ü  கலிலேயா, பெரேயா இவைகளின் கால் பங்கு தேசாதிபதி.
ü  சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளை தன் மனைவியாக கொண்டவன்.
ü  யோவான் ஸ்தானகனை சிறையில் அடைத்து, சிறச்சேதம் செய்தவள்.(மத் 14:10)
ü  பிலாத்து இயேசுவை இவனிடம் அனுப்பியபோது இயேசுவை பரியாசம் செய்தவன்(லூக் 23:1)
 v  ஏரோது பிலிப்பு
ü  திபேரியா, இந்துரேயா, தினிகொத்திணி இவைகளின் கால்பங்கு தேசாதிபதி.
ü  ஏரோதியாளின் கணவன்; சலோமியின் தகப்பன்(லூக் 3:1)
v  ஏரோது லிசானியா
ü  அபிலேனேக்கு, எர்மோன் மலை, தமஸ்கு இடைப்பட்ட பகுதியின் கால் பங்கு தேசாதிபதி.(லூக் 3:1)
பிலாத்து-பொந்தியு(கி.பி.25) தேசாதிபதி
ü  இவன் கிலவுதியு ராயனால் யூதேயாவிற்கு 6ம் தேசாதிபதியாக நியமிக்கப்பட்டான்.
ü  எருசலேமிற்கு பலியிடப்போன கலிலேயரை கொல்லுவித்தான்.
ü  இயேசுவை நியாயம் விசாரித்து சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தவன் இவனே.
ü  இவன் காலத்தில் யூதேயாவிற்கு ஏரோது அந்திபா கால் பங்கு தேசாதிபதியாக இருந்தான்.
அப்போஸ்தலர்களின் காலத்தில் ஏரோதுவின் ஆட்சி:
ஏரோது அகிரிப்பா1 (கி.பி44-52)
ü  மகா ஏரோதின் பேரன்.
ü  யாக்கோபை பட்டயத்தால் கொன்றவன்.
ü  பேதுருவை சிறையில் அடைத்தவன்
ü  தேவதூதனால் அடிக்கப்பட்டு புழு புழுத்து செத்தவன்(அப் 12:23).
ü  ரோமபேரரசன் கலிகுலாவின் நண்பன்
ü  கலிகுலா இவனுக்கு ராஜா பட்டம் வழங்கினான்.
ஏரோது அகிரிப்பா2(அகிரிப்பா1ன் மகன்,கி.பி52-60)
ü  இவன் யூதேயா, கலிலேயா, சமாரியா, பெரேயா பகுதிகளை இணைத்து மகா ஏரோதுபோல் யூதேயா என்ற பெயரில் ஆட்சி செய்தான்.
ü  ரோமப்பேரரசன் கிலவுதியுராயன், பிலிப்பு, லிசனியா ஆட்சி செய்த பகுதிகளையும் இவனுக்கு கொடுத்தான்.
ü  செசரியா தலைநகரமாக இருந்தது.
ü  பேலிக்ஸ், பெஸ்த்து தேசாதிபதிகளாக இருந்தனர்.
ü  பவுல், இவன் முன் சாட்சிபகர்ந்தான்.
பேலிக்ஸ்(கி.பி53-60)-தேசாதிபதி
ü  கிலவுதியு ராயனால் யூதேயா தேசத்திற்கு தேசாதிபதியாக நியமிக்கப்பட்டான்.
ü  பவுலை 2வருடம் சிறையில் வைத்து அவனிடம் லஞ்சம் பெற நினைத்தான்(அப் 23,24).
ü  ஏரோது அகிரிப்பாவின் மகள் துருசில்லாவின் கணவன்.
பொர்கியு பெஸ்து (கி.பி60-62) தேசாதிபதி
ü  நேரோ(Nero) ராயனால் யூதேயா தேசத்திற்கு தேசாதிபதியாக நியமிக்கப்பட்டான்
ü  பேலிக்ஸ் என்பவனுக்கு பின் வந்தவன்(அப் 24:2)
ü  பவுலின் சங்கதியை அகிரிப்பா2, பெர்னீகேயாள் என்பவர்களின் முன் விசாரித்தான்(அப் 25:14)
ü  பவுல் ராயனுக்கு அப்பீல்(அபயமிட்டபடியால்) செய்தபடியால் பவுலை ரோமபுரிக்கு அனுப்பிவைத்தான்.
தேசாதிபதிகள் மற்றும் கால்பங்கு தேசாதிபதிகள்
ரோம பேரரசர்கள்(சக்கரவர்திகள்)
1.அந்திப்பார்தோர் கி.மு47
1.அகஸ்து ராயன் கி.மு27-கி.பி14 (லூக் 2:1)
2.மகா ஏரோது கி.மு33
3.ஏரோது அந்திப்பா கி.பி 4-39(கால் பங்கு தேசாதிபதி),
பிலாத்து
(தேசாதிபதி)
கி.பி 25
2.திபேரியுராயன் கி.பி 14-37(லூக் 3:1)
4.ஏரோது அகிரிப்பா1 கி.பி.39-44
ராஜா பட்டம் பெற்றவன்(அப்12:1-23)

3.கலிகுலா ராயன் கி.பி 37-41
5.ஏரோது அகிரிப்பா2 கி.பி 44-96(அப் 25:13-21,22) இவன் நீண்டகாலம் ஆட்சி செய்தான்
பேலிக்ஸ் (தேசாதிபதி)கி.பி 53-60

4.கிலவுதியு ராயன் கி.பி 41-59
பெஸ்து (தேசாதிபதி) கி.பி60-62.



5.நேரோ(Nero) கி.பி 54-68
6.கால்பா கி.பி 68-69
7.ஒத்தோ கி.பி 68-69
8.வெட்டிலியஸ் கி.பி 68-69
9.வெஸ்பாசிய்ன் கி 69-79
10.டைட்டஸ் கி.பி 79-81
11.டொமாஷியன் கி.பி 81-96
12.நெர்வா கி.பி 96-98




e.தற்போதைய கலத்தில் இஸ்ரவேல் தேசம்:
1.       கி.பி 135: தீத்துராயன் ஆட்சிசெய்த காலத்தில் பர்கோகேபா(போலி மேசியா) என்பவன் தேவாலயம் கட்ட முயற்சி செய்தான்.
2.       அலியா என்ற ரோம சக்ரவர்த்தி காலத்தில் யூதர்கள் கிளர்ச்சியை(உள்நாட்டுப்போர்) ஆரம்பித்தார்கள். அப்போது 6லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். மற்ற யூதர்கள் சிதறடிக்கப்பட்டனர். தேவாலயம் இடிக்கப்பட்டு ஜுபிடர் ஆலயம் கட்டப்பட்டது.
3.       கி.பி 326:கான்ஸ்டன்டைன் என்ற ரோம சக்ரவர்த்தி யுத்தத்திற்குப் போகும்போது சிலுவைக்காட்சியைக் கண்டு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனானான். நாட்டு மக்களும் கிறிஸ்தவர்களானார்கள்.  புறஜாதிக்கோவில்கள் இடிக்கப்பட்டன. அந்தியோகியா, நோபில், பட்டணங்கள், கிராமங்கள் கிறிஸ்தவமாக மாறியது. கிறிஸ்தவ ஜெப ஆலயம் கட்டினான். ரோம் நாடு முழுவதையும் கிறிஸ்தவ நாடாக அறிவித்தான். இது கிறிஸ்தவர்களின் பொற்காலமாகும்.
4.       கி.பி 637:முகமதியர்கள் எருசலேமைப் பிடித்து தேவாலயத்தை இடித்துவிட்டு ஓமர் மசூதியை கட்டினர். அது இந்தநாள் வரையிலும் உள்ளது. எருசலேம் முகமதியர் வசம் வந்தது; இவர்களின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரவேல் நாடு என்னும் பெயரே இல்லாமல் போயிற்று; பாலஸ்தீன தேசமாக மாறியது.
5.       கி.பி 1917:பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் பிரிட்டிஷ் தளபதியாக வந்த ஜெனரல் ஆலன்பி என்பவர் முகமதியரிடமிருந்து எருசலேமைப் பிடித்தார். 30ஆண்டுகள் பிரிட்டிஷ் எருசலேமை ஆட்சி செய்தனர்.
6.       கி.பி 1948ல் யூர்கள் தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என கேட்டனர். பிரிட்டிஷ் அரசாங்கம் இஸ்ரவேல் நாட்டை உருவாக்கி, இஸ்ரவேல் ஜோர்தான் என பிரித்துக் கொடுத்தார்கள். உலகெங்கும் சிதறியிருந்த யூதர்கள் மறுபடியும் வந்தனர். தேவாலயம் இருந்த இடமாகிய எருசலேம் ஜோர்தானில் இருந்தது. பின்பு இஸ்ரவேலர் 6 நாள் யுத்தம் செய்து எருசலேமைத் தங்கள் வசமாக்கினார்கள். தற்போது எருசலேம் இஸ்ரவேல் நாட்டில் உள்ளது. ஆனால் எருசலேமில் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போது மசூதி உள்ளது. இஸ்ரவேலர் அதை இடித்துவிட்டு அங்கு தேவாலயம்கட்ட முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது இஸ்ரவேல் தேசத்தில் யூதர்கள், முகமதியர்கள் வாழுகின்றனர். இதில் தற்சமயம் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் சுமார் 3%தான் இருக்கின்றனர் என்று அறியப்படுகிறது.

முற்பிதாக்கள் மற்றும் இராஜாக்கள் காலம்

பெயர்கள்
காலம் கி.மு
ஆயுசு நாட்கள்
ஆதாம்
3900-2969
930 வருடங்கள் 
சேத்
3769-2857
912 வருடங்கள் 
ஏனோஸ்
3664-2759
905 வருடங்கள் 
கேனான்
3574-2664
910 வருடங்கள் 
மகலாலெயேல்
3504-2609
895 வருடங்கள் 
யாரேத்
3439-2477
962 வருடங்கள் 
ஏனோக்கு
3277-2912
365 வருடங்கள் 


ஏனோக்கு (3277-2912) 365 வருடம் உயிரோடு இருந்தான்:
A.300 வருடம் தேவனோடே சஞ்சரித்தான் ஆதி 5:22.
B.மரணத்தைக் காணாமல் எடுத்துக் கொள்ளப்பட்டான்
C.நியாயத்தீர்ப்பைக் குறித்து முதல்முதல் தீர்க்கதரிசனம் உரைத்தான் யூதா 14,15. 
D.இவன் ஆதாமுக்கு ஏழாம் தலைமுறை.

மெத்துசாலா (3212-2243) 969வருடம் உயிரோடு இருந்தான்:
A.உலகிலேயே அதிகமான வயதுவரை வாழ்ந்தவன்.
B.ஜலப்பிரளயம் வரும்போது வயது 969; ஜலப்பிரளயத்தில் இறந்தான்.

லாமேக்கு (3025-2248) 777வருடம் உயிரோடு இருந்தான்,

 நோவா (2843-1893) 950வருடம் உயிரோடு இருந்தான்:
A.நோவா தேவனோடே சஞ்சரித்தான்.
B.நோவா காலத்தில் ஜலப்பிரவாகம் வந்தது.
C.நோவாவும், அவன் மனைவியும், மூன்று குமாரரும் அவர்களுடைய மனைவிகளும் காக்கப்பட்டனர். நோவா பிள்ளைகள் பெயர் காம், சேம், யாப்பெத்,

சேம் (2341-1741) 600வருடம் உயிரோடு இருந்தான்:
ஆபிரகாம் மரிக்கும்போது 565 வயதோடு வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஏபேர் (2176-1712) 464 வருடம் உயிரோடு இருந்தான்:
ஆபிரகாம் மரிக்கும்போது ஏபேர் 400 வயதோடு உயிர் வாழ்ந்துகொண்டிருந்தான்.
பேலேகு (2142-1903) 239 வருடம் உயிரோடு இருந்தான்:
A.இவன் காலத்தில் பூமி பகுக்கப்பட்டது.
B.பாபேல் கோபுரம் கட்டப்பட்டது.
C.பாஷைகள் பிரிக்கப்பட்டது.
D.ஏபேரின் மகன் ஆதி11:16.
தேராகு (2021-1816) 205 வருடம் உயிரோடு இருந்தான்:
இவன் ஆபிரகாமின் தகப்பன். கானானுக்குப் போகப் புறப்பட்டான். ஆரானிலே மரித்தான்.
ஆபிரகாம் (1951-1776) 175 வருடம் உயிரோடு இருந்தான்:
 ஆபிரகாமுக்கு 58 வயதாயிருக்கும் போது நோவா மரித்தார்.

     யாக்கோபின் சந்ததியார் 70 பேர் எகிப்துக்குச் சென்றார்கள். யோசேப்பு எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக இருந்தபோது இஸ்ரவேலர் மிகுந்த செல்வாக்குடன் இருந்தார்கள். யோசேப்பு மரித்தபின் இஸ்ரவேல் கோத்திரத்தார் 400 வருடங்கள் அடிமைகளாக இருந்தனர். தேவன் மோசேயை தெரிந்துகொண்டு இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். மோசேயின் தலைமையில் சுமார் 25லட்சம்பேர் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தனர். புருசர்கள் மாத்திரம் 6லட்சம் பேர்கள்.
மோசே:(1526-1406) 120 வருடம் உயிரோடு இருந்தான்;
 இவர் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர். முதல் 40 வருடம் பார்வோன் அரண்மனையில் வாழ்ந்தார். 40வருடம் மீதியான் தேசத்தில் ஆடு மேய்க்கிறவனாக இருந்தார். 40வருடம் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தில் இருந்து விடுதலையாக்கி கானானுக்கு அழைத்துச் சென்றார். தேவனிடமிருந்து 10கட்டளைகளைப் பெற்றவர்; நியாயப்பிரமாணங்களை பெற்றவரும் இவரே; வேதத்தில் முதல் 5 ஆகமங்களை எழுதியவர் இவரே.
யோசுவா (1484-1374) 110 வருடம் உயிரோடு இருந்தார்,
மோசே கானான் தேசத்தைச் சென்றடையவில்லை, வழியிலே மரித்தான். மோசேயின் வேலைக்காரனாக இருந்த யோசுவாவை, இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்லும்படி தேவன் தெரிந்துகொண்டார். யோசுவா கானான் தேசத்திற்கு ஜனங்களை நடத்திச் சென்று தேசத்தை ஜனங்களுக்கு பங்கிட்டுக்கொடுத்தார். யோசுவா மரித்தபின் இஸ்ரவேலர் தேவனைவிட்டு சோரம்போய் அந்நியதேவர்களை வணங்கும்படி சென்றபோதெல்லாம் அருகிலும் சுற்றிலும் இருந்த ராஜாக்கள கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது இஸ்ரவேலரை இரட்சிக்கும்படி தேசத்தில் தேவன் நியாதிபதிகளை ஏற்படுத்தினார்.

இனி நடக்க வேண்டிய சம்பவங்கள்
****பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுதல்  
இயேசு கிறிஸ்துவின் மத்திய ஆகாய வருகையில் லட்சோப லட்சம் உத்தம கிறிஸ்தவ விசுவாசிகள் திடீரென்று மாயமாய் மறைந்து இவ்வுலகத்தை விட்டு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். 
"ஏனெனில் கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்களத்தோடும் இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மறித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்ருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்."-1 தெசலோனிக்கியர் 4:16,17 
     1கொரி 15:51,53,54 இவ்வசனங்கள் விசுவாசிகள் இப்பொழுது இருக்கிற உடலோடு போகமாட்டார்கள்; மறுரூபமாகி விண்ணக உடல் உண்டாகி மேலோகத்துக்கு எடுததுக் கொள்ளப்படுவார்கள் என்று விளக்குகிறது. இது எப்படி நிகழும் என்று சந்தேகப்படுபவர்கள் 1கொரிந்தியர் 15ம் அதிகாரம் முழுவதையும் படித்து தியானிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். 
     (அதற்கு மரியாள் தேவ தூதனை நோக்கி: இது எப்படியாகும் ? புருஷனை அறியேனே என்றாள்.
     தேவ தூதன் அவளுக்குப் பிரிதியுத்தரமாக பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது 'தேவனுடைய குமாரன் என்னப்படும்'-லூக்கா 1-:34 ,35,) 
     புருஷனை அறியேனே என்று கேட்ட மரியாள் என்ற கன்னியின் வயிற்றில் பரிசுத்த ஆவியினால் கருவுருவாகி இயேசு கிறிஸ்து பிறந்தார். 
     (அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மொய்யோ என்று  சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவ காலகட்டத்தில் உன்னிடத்திற்கு திரும்ப வருவேன். அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.ஆதி.18:13-15) உயிர்த்தெழுதல் என்பதுதான் கிறிஸ்தவத்தின் மாபெரும் நம்பிக்கையாகும். ஆகையால் சந்தேகப் பேர்வழி தோமாபோல் இல்லாமல் இந்த வாக்குத்தத்தத்தைக் குறித்து ஆவலோடு விசுவாசத்தோடு காத்திருப்போம். இதைப்பற்றிய பலவித விளக்கங்கள் அந்நாளில் விஞ்ஞானிகளால் அறிவிக்கப்படும். விண்வெளியிலிருந்து மறைபொருளான ஒரு பலாத்கார உட்புகுதல் ஏற்பட்டு, இம்மனிதரை ஆவியாக மாற்றி கடத்திப் போய்விட்டது போன்ற பல விளக்கங்களை அவர்கள் கூறுவர். 
     மெய்யான காரணமோ தள்ளப்பட்டு பரிகாசத்திற்கு உள்ளாகும். காரணமென்னவெனில் எல்லா கிறிஸ்தவர்களும் எடுத்துக் கொள்ளப்படமாட்டார்கள். மாய்மாலமற்ற, விசுவாசமுள்ள, சத்தியத்தை அறிகிற அறிவு இருக்கிற உத்தம கிறிஸ்தவ விசுவாசிகளடங்கிய ஒரு கூட்டத்தார் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுவார்கள். கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிற பெருங்கூட்டத்தார் கைவிடப்படுவதினாலும், வீட்டுக்குத் தெரியாமல் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் எடுத்து இரகசியமாக ஆராதனைக்குச் செல்கிற மற்ற மதத்திலுள்ள ஒருசில ஆரம்பகால விசுவாசிகளும் எடுத்துக் கொள்ளப்படுவதினால் இது ஒரு மத ரீதியிலான எடுத்துக் கொள்ளப்படுதல் என்று சொல்ல முடியாது.
     எனவே இந்த நிகழ்ச்சி அனேகரால் பரிகசிகசிக்கப்படும். மேலும் எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று கூட இவ்வுலகத்தில் கைவிடப்பட்டவர்கள் கூறலாம். ஏனெனில் ஆதியாகமம் 19ம் அதிகாரத்தில் சோதோம், கொமோரோ நகரங்கள் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் அழிக்கப்படும் சம்பவத்தை நாம் வாசிக்கிறோம். 14வது வசனத்தில் லோத்து தன் மருமகன்மார்களோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த இடத்தை விட்டு பறப்படுங்கள்; கர்த்தர் இந்த பட்டணத்தை அழிக்கப் போகிறார் என்றான். அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன்(லோத்து) பரியாசம் பண்ணுகிறதாகக் கண்டது என்று வாசிக்கிறோம்.
     இந்த நிகழ்ச்சிப் பற்றின முன்னறிவிப்பு விசுவாசியாதவர்களுக்கு பரியாசமாகத்தான் தோன்றும் என்பதில் நாம் ஐயம் கொள்ள வேண்டிய தேவையில்லை. இயேசுகிறிஸ்து சீக்கிரத்தில் வரப்போகிறார் என்று நாம் ஓங்கி, உரக்கச் சத்தம் போட்டால் ரோட்டில் போவோர், வருவோர் நம்மை நமட்டுச் சிரிப்போடு பார்த்துவிட்டு செல்கிறார்கள். சிலர் இயேசு கிறிஸ்து எப்பொழுது வருகிறார், பஸ்ஸில் வருகிறாரா, காரில் வருகிறாரா, அல்லது ஏரோபிளேனில் வருகிறாரா என்று நம்மை பரியாசம் செய்கின்றனர். ஒருசில மேடைப்பேச்சாளர்கள் "இயேசு கிறிஸ்து வருகிறாராமே வந்தால் வரட்டுமே. மறுபடியும் பிடித்து சிலுவையிலறைந்து விடுவோம்" என்று பேசுகிறார்கள். பெரம்பலூரில் அரசியல் கூட்டத்தில் ஒருவர் பேசும்போது "இயேசு கிறிஸ்து வந்தால் என்ன ! 63 நாயன்மார்களோடு 64வது நாயன்மாராக வைத்துக் கொள்வோம்" என்று பேசினார். இப்படி பரிகாசம் பண்ணுவது இக்காலத்தில் மிகுதியாயிருக்கிறது
     இந்த நிகழ்ச்சி நடைபெறும்போது ஆகாய விமானம், இரயில், கப்பல், லாரிகள், பேருந்துகள், கார்கள் போன்றவற்றில் ஓட்டுநர்கள் விசுவாசிகளாக இருந்தால் அவர்கள் எடுத்துக் கொள்ளப் படுவார்கள்; இதனால் ஓட்டுநர்கள் இல்லாததால் ஏராளமான விபத்துகள் உண்டாகும்; ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கலாம்; நீங்கள் இந்த கர்த்தரின் வாக்குத்தத்தத்தை நம்பவில்லையென்றால் லட்சோப லட்சம் மக்கள் மாயம் என்ற தலைப்புச் செய்தியுடன் தினமலர், தினத்தந்தி, THE HINDU பேப்பரில் என்றாவது ஒருநாள் வந்தாகும். அந்த நாள் விரைந்து வந்து கொண்டிருக்கிறது; காலம் கடந்தபின் செய்தித்தாளை படித்து கிறிஸ்துவை விசுவாசிப்பதில் பிரயோஜனமாகுமா? ஆகவே இந்த அற்புதமான நிகழ்ச்சிக்கு நீங்களும் கிறிஸ்துவை விசுவாசித்து தயாராகும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அந்தி கிறிஸ்துவின் ஆட்சிப்பீடம் | THE KINGDOM OF THE ANTICHRIST 
    ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்ற அவை(europian parliment) அக்காலத்தில் கட்டிமுடிக்கப்படாத நிலையில் கடவுளால் அழிக்கப்பட்ட பாபிலோன் கோபுரம் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.


அதில் 751 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. முக்கிய தகவல் என்னவென்றால் 666ஆம் எண்ணுள்ள நாற்காலி மட்டும் காலியாக இருக்கிறது. அப்பணியிடம் நிரப்பப்படவில்ல. 2005ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய ஐக்கிய மாநாட்டில் அரியணை ஏறியவர்களின் பின்னால் அமைக்கப்பெற்ற தலைப்புப் பதாகையில் மூன்று ஒரே மாதிரியான தலைப்புள்ள பதாகைகளை ஒட்டியுள்ளனர். இவைகள் அந்தி கிறிஸ்துவின் வருகைக்கு முன் ஏற்பாடுகளாகவே சுட்டிக்காட்டலாம்.


 ஐரோப்பிய குடியரசின் கமிட்டி வளாகத்தில் மிருகத்தின் மேல் ஏறியுள்ள ஸ்திரீயின் உருவம் நிறுவப்பட்டுள்ளது.


வெளி.17:7,9ம் வசனங்களில்  சொல்லப்பட்டுள்ள ஏழு தலைகலுள்ள மிருகத்தின்மேல் ஸ்திரீ உட்கார்ந்திருக்கிறதாக வசனம் விளக்குகிறது. ஏழு மலைகலுள்ள நகரம் யாதெனில் அது ரோம் நகரமாகும்; பாபிலோன் என்ற வார்த்தையின் பொருள் ரோம்(ரோம சாம்ராஜ்யம்) மற்றும் இவ்வுலகத்தைக் குறிக்கும்.


****உலகில் அந்தி கிறிஸ்துவின் ஏழு ஆண்டு ஆட்சி 
     உலக நாடுகள் அனைத்தும் இன்று மேற்கத்திய நாடுகளையும் அவற்றின் அமைப்புகளையும் எதிர்பார்த்து ஏங்கி நிற்கின்றன. உலக வங்கி, அனைத்துலக நிதியம் இவற்றை எதிர்பார்த்தே தம் செயல்திட்டங்களை வகுக்கும் அவல நிலையிலுள்ளன. உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை இவற்றின் பொருளாதாரக் கொள்கைகளை முடி முதல் அடிவரை பாதிக்கிறது. இதனால் நாட்டின் பொருளாதாரக் கொள்கை, நாட்டு அமைப்புகளால் நிர்ணயிக்கப்படாமல் வெளியிலிருந்து நாட்டு மக்கள் மீது சுமத்தப்படுகின்றன. இப்பொருளாதாரச்சார்பு அரசியல் உலகத்தில் முக்கியமாக சர்வதேச அரசியலில் வளரும் நாடுகளின் கைகளை கட்டிப்போடுகின்றன.
     1995 ஜனவரியில் 117 நாடுகளால் கையெழுத்திடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு GATT ஒப்பந்தம் நிறைவேறியது. முதலில் முரண்டுபிடித்த இந்தியா உலகம் போற போக்கு போனால்தான் கொஞ்சமாவது பிழைக்க முடியும் என்றெண்ணி வேறு வழியின்றி GATT ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. GATT ஒப்பந்தத்தைத் தொடர்ந்து WTO என்று சொல்லக் கூடிய World Trade Organisation என்ற அமைப்பு ஐ.நா.வால் உருவாக்கப்பட்டது. இன்று WTOதான் உலக பொருளாதார மையமாக இருக்கிறது. மத, இன, தேசிய பேதங்கள் மறைந்து உலக உணர்வு ஏற்படவேண்டுமென்று இன்று எங்கும் பிரச்சாரங்கள் செய்யப் படுகின்றன. இன்று நாட்டரசுகள் இருப்பதுபோல, உலக அரசு ஒன்று உருவாகி நாமனைவரும் உலகமக்கள் எனக் கருதும் போக்கு வருங்கால உலகில் வளர்ந்துவரும் என்றும், அப்படியிருந்தால்தான் இன்றைய பிரச்சனைகளுக்கும், பிற்போக்கு நிலைக்கும் தீர்வாக விளங்கும் என்றும் இன்றைய பத்திரிக்கைகளின் செய்திகள் கூறுகின்றன.
     உலக வாணிபக் கழகம், உலக வங்கி, உலக வங்கி, உலக நீதிமன்றம், உலக தொழிலாளர் நிறுவனம், உலக வானிலை அமைப்பு, உலக மதிநுட்ப சொத்து சார்ந்த அமைப்பு(WIPO) இப்படி உலக அமைப்புகள் பல தோன்றியிருப்பதை 'உலக அரசு' என்ற பெயரால் இந்து நாளிதழ் வர்ணித்துள்ளது. -The Hindu 28.04.1994. இப்படி உலக அரசு அமைந்தால் அதற்கு வித்திட்டவர் என்ற பெருமை மறைந்த விஞ்ஞானி டாக்டர்.ஆல்பர்ட் ஐன்ஸ்டைனையேச் சாரும். ஜனநாயக உலக அரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்பது அவர் கருத்தாகும். 1948ல் உலக சமாதான அறிஞர் மாநாட்டின் அமைப்புக் குழுவுக்கு ஐன்ஸ்டைன் ஒரு செய்தியனுப்பினார். அந்தக் குழு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. போலந்தில் 'ராக்லால்' என்னுமிடத்தில் கூடிய மாநாடு அது.
அவர் அனுப்பிய செய்தியின் ஒரு பகுதி வருமாறு: 
     "நாடுகளுக்கு மேற்பட்ட அமைப்பு ஒன்றிற்கு மட்டும் ஆயுதங்களை உற்பத்தி செய்யவும், வைத்திருக்கவும் அதிகாரம் இருந்தால் மக்கள் குலம் அழிக்கப்படாமலும் ஒழிக்கப்படாமலும் இருக்க முடியும்".
     தீவிரவாதத்தினால் பாதிக்கப்படுகிற இன்றைய உலக சமுதாயம் மேற்கண்ட ஐன்ஸ்டைனின் கூற்றைக் குறித்து யோசிக்க தொடங்கிவிட்டது. 'ஒரே உலக இராணுவம்' என்று இப்போதே பல அரசியல் தலைவர்கள் சப்தம் போட ஆரம்பித்துவிட்டனர். "உலக சமாதானம்" என்று கத்தோலிக்க போப்.ஜான்பால் அடிக்கடி தன் சுற்றுப் பிரயாணங்களில் கூறிக் கொண்டு வந்தார். U.N.O.வின் முன்னால் பொதுச்செயலாளர் யூதாண்ட் அணு ஆயுத அழிவினின்று உலகை காப்பாற்ற வேண்டுமென்றால் ஒரே உலக தலைவன், உலக அரசு அமைய வேண்டுமென்று கூறினார்.
     இப்படி உலக அரசு அமைந்தால் தன் அரசாங்கத்தின் முழு பொருப்பையும் ஒப்படைக்கத்தயார் என்று இங்கிலாந்து பாராளுமன்றம் 16.05.1960ல் அறிவித்தது. மற்ற 9 நாடுகளும் இதை ஆதரித்தன. ஐரோப்பிய யூனியனின் முன்னால் தலைவர் 'ஹென்றி ஸ்பார்க்' பொருளாதாரத்தில் செழிப்பையும், சமுதாயத்தில் சமாதானத்தையும் கொண்டுவரக்கூடிய ஒரு தலைவன், ஒரே தலைவன் எங்களுக்கு வேண்டும்; அந்தத் தலைவன் தேவனாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப் போகிறோம்; அல்லது சாத்தானாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அப்படிப்பட்ட தலைவன் எழும்பி வரட்டும், அவனுக்காக காத்திருக்கிறோம் என்று கூறினார்.
     ஒரே உலக அரசு, ஒரே பண ஒழுங்குமுறை, ஒரே உலக இராணுவம், ஒரே பொருளாதாரக் கொள்கை, ஒரே உலகச்சட்டங்கள் இவ்வாறாக உலக அரசு அமையும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை இன்றைக்கு நடக்கும் சம்பவங்களைக் கொண்டு நாம் அறிந்துகொள்ளலாம். ஏற்கனவே ஒரு குட்டி உலக அரசாக ஐரோப்பிய யூனியன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா,கனடா, இரஷ்யா, ஜப்பான்,சீனா, ஆகிய நாடுகள் ஐரோப்பிய யூனியனின் நெருங்கிய நட்பு நாடுகள் என்ற அந்தஸ்தில் இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைய உள்ளன. இந்த ஐரோப்பிய யூனியனுடன் உலக நாடுகள் தஞ்சமடையும்போது தானாகவே உலக அரசு அமைந்துவிடும். அப்படி அமைந்துவிட்டால் அதன் சர்வாதிகார தலைவன் அந்திக் கிறிஸ்து என்பதில் ஆச்சரியப்படத் தேவையில்லை. இன்று அமெரிக்காவின் டாலரைவிட யூரோவின் மதிப்பு 10ரூபாய் கூடுதலாக உள்ளது.
     ஐரோப்பிய யூனியனின் அதாவது உலக அரசின் தலைவனாகிய அந்திக் கிறிஸ்து யூத இனத்தைச் சார்ந்தவனாக இருக்கக் கூடும் என்று பலராலும் நம்பப்படுகிறது. அந்திக் கிறிஸ்துவின் எண் 666 ஆகும். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆங்கிலம் மற்றும் தமிழ் சினிமாப்படங்களில் 666 என்ற எண்ணை வைத்து உருவாக்கி வசூலை அள்ளினார்கள். இன்றைய தமிழக பொதுமக்களுக்கு 666 என்றால் பேய் என்ற விபரம் சினிமாப் படங்கள் மூலமாக தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்கள். பட்டிதொட்டியெல்லாம் இந்த 666 எண் இப்பொழுது பிரபலமாகிவிட்டது. அமெரிக்காவில் LEFT BEHIND PART1, PART2 என்ற சினிமா படம் தயாரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அது இப்போது வெளிநாடுகளில் பல சினிமா தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில் வெளிப்படுத்தின விசேஷத்திலும், சுவிசேஷங்களிலும், தானியேல், ஏசாயா தீர்க்கதரிசன புஸ்தகங்களில்  எழுதப்பட்டுள்ளதின்படி அந்தி கிறிஸ்துவின் வெளிப்படுதல் எப்படியிருக்கும் என்பதை விளக்கியுள்ளார்கள்.
     சில வருடங்களுக்கு முன்பு மாலை மலர், மாலை முரசு பேப்பரில் 666 எண் தலையில் காணப்பட்ட ஒரு குழந்தை அமெரிக்காவில் காணப்பட்டதாக மக்கள் ஆச்சரியப்படும் வகையில் செய்திகளை வெளியிட்டது.
1)உலக வங்கியின் சங்கேத எண் 666.
2)அமெரிக்க ஐக்கிய நாட்டு ஊழியர் அட்டை எண் 666.
3)அமெரிக்க கடன் அட்டை எண் 666ல் தொடங்குகிறது.
4)இஸ்ரேல் நாட்டிலுள்ள அரேபியருக்குச் சொந்தமான எல்லா பதிவு எண்களும் 666-ல் தொடங்குகிறது.
5)இஸ்ரேல் நாட்டின் அயல்நாட்டு தொலேபேசி எண் 666.
6)எருசலேம் நகராட்சியின் தொலைப்பேசி எண் 666-666 என்று 1977ம் ஆண்டு மாற்றப்பட்டது.
7)இன்டர்நெட் மூலம் செய்தியனுப்புவோர் முதலில் மூன்று WWW-வை உபயோகப்படுத்த வேண்டும். எபிரேய மொழியில் W என்பது 6 என்ற எண்ணுக்கு குறியீடு. ஆக WWW(World Wide Web) என்றால் 666 என்று வருகிறது.
8)இஸ்லாமியரின் திருக்குரானின் மொத்த வசனங்கள் 6666.
9)Computer எனபதை அதன் A,B,C வரிசைப்படி 6-ஆல் பெருக்கினால் கிடைக்கும் கூட்டுத்தொகை 666 ஆகும்.
A=6; B=12; C=18; D=24; E=30; F=36; G=42; H=48; I=54;
 J=60; K=66; L=72; M=78; N=84; O=90; P=96; Q=102; R=108
S=114; T=120; U=126; V=132; W138; X144; Y=150;Z=156. COMPUTER=18+90+78+96+126+120+30+108=666 

போப்பாண்டவருடைய தலையில் வைக்கப்படுகிற கிரீடத்தில் பதிக்கப்பட்டிருக்கிற எழுத்துக்களை ரோம எண்களின்படி கூட்டிப்பார்த்தால் 666 என்ற எண் வருகிறது.

போப்பாண்டவருடைய கிரீடத்தில் பதிக்கப்பட்டிருக்கிற வாக்கியமாவது:VICARIUS FILII DEI என்பதே; இது 'தேவ குமாரனுக்குப் பதிலாள்' என்னும் இலத்தீன் சொல் ஆகும்









V=5
I=1
C=100
A=0
R=0
I=1
U=5
S=0
F=0
I=1
L=50
I=1
I=1
D=500
E=0
I=1
மொத்தம்=666 

     இன்றைக்கு 666 என்ற எண் ராசியான எண்ணாக பலராலும் கருதப்படுகிறது. அதனால்தான் 6666 என்ற எண்களை தங்கள் வாகனங்களுக்கு வைக்கிறார்கள். இவ்வாறாக 666 எண் என்பது இப்போது எல்லோராலும் சர்வ சாதாரணமாக விரும்பப்படுகிறது. மேற்கண்ட 666 எண்கள் எல்லாம் அந்திகிறிஸ்து வர ஒரு முன்னேற்பாடுகள் எனலாம்.
      இப்பொழுது கிரெடிட் கார்டுகளும், பணமும் சேர்ந்து பயன்படுத்தக்கூடிய காலத்தில் இருக்கிறோம். ஆனால் இனி வரும் காலத்தில் பணப்புழக்கம் முற்றிலும் போய்விடும்; பணம் கொள்ளையடிக்கப் படுவது, கள்ள நோட்டு அச்சடிப்பு, கருப்பு பணம் பதுக்கி வைக்கப்படுவது ஹவாலா மோசடி போன்ற சிக்கல்களை தீர்ப்பதற்கு ஒரு பண ஒழுங்குமுறை அவசியம்|கரன்ஸி (ரூபாய்) நோட்டுகளை கையில் எடுத்துச் செல்வதால் ஏற்படும் பிரச்சனைகளுக்குப் பரிகாரமாக அறிமுகமானதுதான் கிரெடிட் கார்டு(Credit Card) இந்த எலக்ட்ரானிக் அட்டைகளை பயன்படுத்துவதிலும் பல இடையூறுகள் உருவாகின:
1)தொலைந்துவிடக்கூடியது
2)திருடப்பட வழியுண்டு
3)உடையக்கூடியது
4)தவறானவர்கள் பயன்படுத்தும் ஆபத்து
5)அவ்வப்போது புதுப்பிக்க வேண்டியுள்ளது
இதற்கு மாற்றுவழி Bio Chips:
மைக்ரோ சிப்ஸ்(Micro Chips) என்ற மிகச்சிறிய கருவியில் ஒருவருடைய சகல விபரங்களையும் பதிவு செய்துவிடுதல்; டிரான்ஸ்பாண்டர் என்ற நுண்ணிய கருவியின் மூலம் இதில் பதிவு செய்யப்பட்டதை வாசிக்கலாம். இதை இயக்குவதற்கு மிகச்சிறிய லித்தியம் பேட்டரியையும் இணைத்து Bio Chips என்ற உலோக மாத்திரைக்குள் அடக்கி வைத்து விடுகிறார்கள். இந்த பேட்டரி மனித உடலிலுள்ள வெப்பத்தின் மூலம் ரீசார்ஜ் ஆகிக்கொண்டே இருக்கும். இந்த Bio Chips அளவு ஒரு அரிசியின் அளவுதான் இருக்கும். இதை உடலில் பதித்துவிட்டால் மேலே கூறப்பட்ட எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதாவது இது தொலைந்துவிடாது; யாரும் திருட முடியாது; தவறானவர்கள் பயன்படுத்த வழி இல்லை.
உடலில் எந்த இடத்தில் இதை பதிப்பது?
இந்த Bio-Chipஐ உடலில் எந்த இடத்தில் பதிய வைப்பது பொருத்தமாக இருக்கும் என ஆராய நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. இதை ஆராய்ச்சி செய்து அறிக்கை தாக்கல் செய்ய சுமார் 1.5 மில்லியன் டாலர் செலவானது(சுமார் 7கோடி ரூபாய்) ஆய்வின் கண்டுபிடித்தது என்ன? உடலில் இரண்டு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே இதை வைக்க பொருத்தமானது என்று முடிவு செய்யப்பட்டது:
1)நெற்றி
2)வலது கையின் வெளிப்புறம் 
 இது வேதாகமத்தின் தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிக்கிறது. அரிசி அளவுள்ள அந்த சிறு கருவியியை நெற்றியிலோ, வலது கையிலோ பதித்துவிட்டால் இதை யாரும் எடுக்க முடியாது; அப்படியே யாரும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற முயன்றால் Bio-Chips(உலோக மாத்திரை) உலோக மாத்திரை உடைந்துவிடும்;
அதிலிருந்து வெளியேறும் ரசாயனப் பொருள் சம்பந்தப்பட்டவர்களின் உடலில் பாதிப்பை உண்டுபண்ணும். அதிலிருந்து வெளியேறும் மைக்ரோ அலை மூலம் மத்திய அலுவலகத்திற்கு (GPS-Global Positioning System) தானாய் செய்தி சென்றடையும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை கண்டறிந்து விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.
     அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள் இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது, நெற்றிகளிலாவது ஒரு முத்திரையை பெரும்படிக்கும்,
     அந்த முத்திரையையாவது, அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.-(வெளி 13:16,17)
     இதிலே ஞானம் விளங்கும். அந்த மிருகத்தின் இலக்கத்தை புத்தியுடையவன் கணக்குப் பார்க்கக் கடவன்: அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது. அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு(வெளி 13:16-18)

Mondex Smart Card: 
     இந்த Bio Chips(உலோக மாத்திரை) என்ற சிறிய எலக்ட்ரானிக்கருவியை Mondex Smart Card என்ற நிறுவனத்திற்காக மோட்டரோலா(Motorola) என்ற கம்பெனி தயாரிக்கிறது.
     Mondex என்ற இந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளாக 20 நாடுகளில் 250க்கும் அதிகமான கம்பெனிகள் உலகமெங்கும் இதை விற்பனை செய்து வருகின்றன. பிரிட்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல், ஹாங்காய், சீனா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா, தைவான், இலங்கை, கோஸ்டரிக்கா, குவாட்டமாலா, நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ், எல்சால்வடார், பிரேசில் ஆகிய நாடுகள் இந்த கம்பெனிகளின் பொருட்களை பயன்படுத்துகின்றன.
     இந்த Mondex கம்பெனியின் பங்குகளில் 51 சதவிகித பங்குகளை மாஸ்டர்கார்ட் நிறுவனம் பெற்று Bio-Chipsஐ விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. Mondex நிறுவனம் வருடத்திற்கு 100 கோடி Bio Chips உற்பத்தி செய்கிறது. Mondex என்றால் பணம் உன் கையில் என்று பொருள்.
     Mon=Monetary 
     Dex=Dexter=Righthand side 
     இந்த எலக்ட்ரானிக் அடையாளத்தை  தன் உடலில் தரித்தவன் மிருகம் என்று கூறப்பட்டுள்ள அந்திக்கிறிஸ்துவின் அடையாளத்தை தன் உடலில் பெற்றவன் என்று பொருள். இந்த அடையாளத்தை உடலில் பெற்ற ஒருவரும் பரலோகம் செல்லமாட்டார்கள். 
     எது எப்படியோ அந்தி கிறிஸ்துவின் நாமத்திற்குரிய 666 என்ற எண் உலகத்தின் ஒவ்வொரு குடிமகனும் நெற்றியில் அல்லது வலது கையில் தரித்திருக்க வேண்டும் என்பது அந்தி கிறிஸ்துவின் கட்டளையாக இருக்கும் என்றும், அந்த எண் அல்லது அந்தி கிறிஸ்துவின் முத்திரை பெறாதவர் ஒரு பொருளை விற்கவோ, வாங்கவோ முடியாது என்றும் வெளி 13:17ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
     மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவம் கொடுக்கப்பட்டது.(வெளிப்படுத்தின விசேஷம் 14:15)
     மேற்கண்ட வசனத்தை உற்றுநோக்கும்போது சொரூபம் என்பது அந்திக் கிறிஸ்துவின் டூப்ளிகேஷன் என்பது புலனாகிறது. பொதுவான முறையில் குழந்தை 'குரோமோசோமை' தந்தையிடம் பாதி, தாயிடம் பாதி பெற்றுக்கொள்கிறது. ஆனால் 'குளோனிங்' முறையில் ஓர் செல்லின் உட்கருவின் ஓர் திசுவிலிருந்து குரோமோசோம் வருகிறது. குளோனிங்-கில் உருவாக்கப்பட்ட சேயும் அதன் தாயை ஒத்திருக்குமா என்றால் 'ஜெனிடிக்கலி(மரபுப்படி) ஒத்திருக்கும். குளோனிங் முறையில் மனிதர்களை உருவாக்க முடியும். 'ரிச்சார்ட்' என்பவர் அமெரிக்காவில் மனித குளோனிங் க்ளினிக்கை முதன்முதலில் திறந்தவராவார். ஆனால் தற்சமயம் மனித குளோனிங் முறைக்கு அமெரிக்க அரசாங்கம் தடைவிதித்துள்ளது. தடை விலகும் பட்சத்தில் குளோனிங் முறை மூலம் மனிதர்கள் உருவாக்கப்படலாம். அந்திகிறிஸ்துவின் குளோனிங்தான் அந்தி கிறிஸ்துவின் சொரூபம் என்று கூறப்படுகிறது. அதாவது குளோனிங் முறை மூலம் அந்திக் கிறிஸ்துவின் டூப்ளிகேஷன் உருவாக்கப்படும்.
     எனவே குளோனிங் முறை மூலம் உருவாக்கப்படும் அந்திக் கிறிஸ்துவின் டூப்ளிகேஷனே சொரூபம் என்று சில பிரசங்கியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் என்னதான் குளோனிங் மூலம் மனிதனை உருவாக்கினாலும் உருவாக்கப்பட்ட மனிதன் ஆவி, ஆத்துமா, சரீரம் உள்ள முழு மனிதனாகி விடுகிறான். ஆவி, ஆத்துமா, சரீரம் உள்ள முழு மனிதனை 'சொரூபம்' சிலை என்று சொல்ல முடியாது. வேதமோ பேசத்தக்க சொரூபம் என்று கூறுகிறது. இன்று எல்லா நிலைமைகளிலும் 'ரோபோ'  பயன்படுகிறது.
     ரோபட்டுகள் எனப்படும் எந்திர மனிதனின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இயந்திர மனிதர்களாகிய இந்த ரோபோக்கள் பேசும், நடக்கும், மனிதன் போல எல்லாமே செய்யும். இராணுவத்தில் ஆயுதங்கள் தயாரிப்பில் முதற்கொண்டு வீடுகளில் சகல வீட்டுவேலைகள் செய்வதுவரை சிறுகுழந்தைகளை பள்ளிக்கு பத்திரமாக கூட்டிச்சென்று கூட்டிவருதல் உட்பட எல்லாவற்றையும் ரோபோக்கள் சிறப்பாக செய்கின்றன. நிலத்தில் பதிக்கப்பட்டிருக்கிற கன்னி வெடிகளை அகற்றுதல் ஆகியவற்றில் ரோபோக்களின் பங்கு முக்கியமாகும். ரோபோக்களின் கால்பந்து போட்டி ஜப்பானில் புகழ் பெற்றதாகும் ரோபோக்கள் தயாரிப்பில் ஜப்பான் நாடு முன்னிலையில் இருக்கிறது.
     இந்த ரோபோக்கள் செயல்படுவதில் 'பேட்டரிகள்' முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பிட்ட நேரம்வரை மட்டுமே இயங்கும் சக்தி கொண்ட பேட்டரிகள் இருப்பதால் ரோபோட்டுகளை நாள்கணக்கில் தொடர்ந்து இயங்க வைக்க முடியாது. இந்த பிரச்சனைக்கு இங்கிலாந்து விஞ்ஞானிகள் தீர்வு கண்டுள்ளனர். அதாவது பூச்சிகள் மற்றும் சிறு பறக்கும் உயிரினங்களை தின்று அதன் மூலம் மின்சக்தி பெற்று இயங்கும் வகையில் புதிய ரோபோட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதற்கு இகோபாட் 2 (EcoBot 2) என்று பெயரிட்டுள்ளனர். இத்தகைய ரோபோட்டுகள் மூலம் மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பூச்சிகளை அழிக்க முடியும். அதே நேரத்தில் நீண்ட நேரம் இயங்கும் வகையில் ரோபோட்டுகளை தயாரிக்கவும் முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
     அந்திக் கிறிஸ்துவின் உருவ அமைப்பிற்கேற்ப ரோபோக்கள் செய்யப்பட்டு, ஆங்காங்கே உலகின் பல பகுதிகளில் வைக்கப்பட்டு, மக்கள் அந்த சொரூபத்தை தெய்வமாக வணங்க கட்டாயப்படுத்தப்படுவார்கள். அப்படி வணங்காத மக்களை அந்த ரோபோக்களே கொலை செய்யும் என்று கருதப்படுகிறது. வேதம் அந்தி கிறிஸ்துவின் உருவமுள்ள சிலை பேசும், வணங்காதவர்களை கொலை செய்யும்படியான ஓர் உயிருள்ள சிலை போன்றிருக்கும் என்று கூறுகிறது. இது ரோபோக்கலாகத்தான் இருக்கக் கூடும் என்று அனேக வேத பண்டிதர்கள் கருதுகின்றனர்.
     ஹிட்லர் ஆட்சிக்கு வரும்முன் உலகப் பெரும் பொருளாதார நெருக்கடி காணப்பட்டது அந்திக் கிறிஸ்துவின் ஆதிக்கத்திற்கு தொடக்க காலத்திற்கு முன்னும் உலகலாவிய பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் தீவிரவாதம் இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மாபெரும் தலைவனாக ஒருவனுடைய வருகைக்காக காத்துக்கொண்டு இருப்பார்கள். இவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திச் செய்யக்கூடிய ஒரு மாயத் தோற்றத்தை உண்டுபண்ணி (அதாவது இன்றைய அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகள் போல) உலக சமுதாயத்திற்கு அந்தி கிறிஸ்து தன்னை உலக மாபெரும் தலைவனாக காண்பிப்பான். அந்தி கிறிஸ்து இப்படி மக்கள் தலைவனாக இருந்து பிறகு கொடுரமான உலக சர்வாதிகாரியாய் மாறுவான்.
     இவனது ஆரம்பம் செழிப்பாகவும், சமாதானமாகவும் இருக்கும். பிறகு போகப்போக பஞ்சம், யுத்தம், நாசம் ஏற்பட்டு கொடூரமானதாய் முடிவடையும். வேத வசனங்களை ஆராய்ந்து வேத பண்டிதர்கள் இவனது ஆட்சியின் முதல் 3 1/2 வருடங்கள் உபத்திரவக் காலம் என்றும், பிந்தைய 3 1/2 வருடங்கள் மகா உபத்திரவக் காலம் என்றும் பிரிக்கிறார்கள். அந்தி கிறிஸ்து பிசாசின் ஒட்டுமொத்த குணலட்சணங்களையும் உடையவனாய் இருப்பான். பழங்கால ரோம சீஸர்களை மக்கள் தெய்வமாக வணங்கினர்; தெய்வங்கள் என்று ஏற்றும் கொண்டனர்(கிறிஸ்தவர்கள் தவிர). இதனால் கிறிஸ்தவர்கள் கொடூரமாய் கொலை செய்யப்பட்டனர்.

     ரோமப் பேரரசர்களின் புதுப்பித்தலாக விளங்கும் அந்திக்கிறிஸ்துவும் தன்னை தெய்வம் என்ற உன்னத நிலையை ஜனங்கள் மத்தியில் நிலைநிறுத்துவான். ....பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தை பின்பற்றி..... என்று வெளி 13:3ல் வாசிக்கிறோம். அந்தி கிறிஸ்துவின் ஆரம்பம் மிகவும் பரிதாபகரமானவனாய் தோன்றி பிறகு எல்லோரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்து கொடூரமானவனாய் முடிவடைவான்.

*****கள்ளத்தீர்க்கதரிசி உலகில் எழும்புதல்:-



     பின்பு வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன். அது ஒரு ஆட்டுக்குட்டிக் கொப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலு சர்ப்பத்தைப் போல் பேசினது.(வெளிப்படுத்தின விசேஷம் 13:11)
     1995 ல் கிறிஸ்தவரும், யூதரும், புத்தமதத்தவர்களும், இந்துக்களும், கன்பூஷியஸ் மதத்தவரும் சேர்ந்து ஒரு கூட்டம் நடத்தினர். அதில் மாறி, மாறி வாசிப்பதற்காக சகல மத கிரந்தங்களிலிருந்தும் பகுதிகள் சேர்க்கப்பட்டிருந்தன; அக்கூட்டம் ஒரு பெரும் வெற்றியாக கருதப்பட்டது. 1986ல் இத்தாலியிலுள்ள அசிசி என்ற இடத்தில் போப் இரண்டாம் ஜான்பால் தலைமையில் தலாய் லாமா, இந்து மத துறவிகள், புத்தமத பிட்சுகள் உட்பட எல்லா மதத் தலைவர்களும் ஒன்று கூடினர். போப் 2ம் ஜான்பால் பேசியபோது தேவனிடத்தில் சேருவதற்கு அநேக பாதைகள் உண்டு என்று பேசினார்.
     சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிந்திருக்கிற சபைகளான ரோமன் கத்தோலிக்கச் சபையும் ஆங்கிலிக்கன் சபையும் இணைந்தால் போப்பு "உலகலாவிய தலைவராக" இருப்பார் என்று இரு சபைகளின் உயர்மட்டக் குழு 1982 மார்ச் 30ல் இலண்டனில் அறிக்கை வெளியிட்டது. எனவே பிரட்டஸ்டாண்டு பிரிவினை சபைகளும், ரோமன் கத்தோலிக்க சபையும் சீக்கிரத்தில் இணைய இருப்பதாக நாம் அறிந்து கொள்ளலாம். ஜெப்ரி ஷேடன் என்ற சமூக சேவகர் 10,000 புரட்டஸ்டாண்டு கிறிஸ்தவ போதகர்களை அவர்களுடைய கிறிஸ்தவ விசுவாசத்தைக் குறித்து இரகசிய பேட்டிக் கண்டார். இதில் 45% பேர் இயேசு கிறிஸ்து தேவன் இல்லை என்று கூறினர்; 80% பேர் பைபிள் தேவனால் கொடுக்கப்படவில்லை என்றனர்; 36% பேர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றனர்.
     1960 முதல் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கிறிஸ்தவ விசுவாசம் குன்றி வருகிறது. ஏராளமானோர் ஆராதனைக்குச் செல்வதில்லை. அனேக கிறிஸ்தவ சபைகள் உண்மை விசுவாச நெறியினின்று வழுவிவிட்டன. இது எதை காண்பிக்கிறதென்றால் கிறிஸ்துவின் வருகை விரைவில் இருக்கிறது என்பதை மட்டும் காட்டாமல் வேதாகம விசுவாசத்தை தவிர்த்துவிட்டு, ஒரே ஐக்கியமுள்ள பக்தியற்ற கிறிஸ்தவ உலகம் ஒரே தலைமையின் கீழ் ஏற்படும் என்பதையும் காட்டுகிறது.
     1948-ல் கிறிஸ்தவ சபைகளின் பொது சபை என்று உருவாகி 1970ல் உலகச் சபைகளின் பொதுச்சபை என்று மாறிய ஸ்தாபனம் இன்று எல்லா விசுவாசங்களையும் இணைக்கின்றது. மதங்கள் ஒன்றுபட வேண்டுமென்றால் முதலாவது கிறிஸ்தவ உலகம் ஒன்றுபட வேண்டும். அதற்குப் பிறகுதான் உலகின் பல மதங்கள் ஒன்றுபட முடியும். கிறிஸதவ உலகம் போப்பின் தலைமையின்கீழ் ஒன்றுபட இருக்கிறது என அறிந்தோம்; அதற்குப் பிறகு உலகப் பொது மதம் உண்டாகும் என்று தெரிகிறது. எப்படி ஹிட்லருக்கு கோயபல்ஸ் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஜெர்மன் மக்களை நாஜிக்கொள்கைகளை ஏற்க வைத்தானோ அதுபோல கள்ளத்தீர்க்கதரிசி மத உலகில் எழும்பி பிரகாசித்து, அந்திக் கிறிஸ்துவை கடவுளாக மக்கள் மத்தியில் உயர்த்தி காட்டுவான்.
     இந்த கள்ளத் தீர்க்கதரிசி ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் சாத்தானின் அதிகாரம் பெற்ற மனிதனாக காணப்படுவான். உலகில் அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்பியிருக்கிறார்கள்; இன்னும் எழும்பக் கூடும்; இவனே கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எல்லாம் தலைமை கள்ளத்தீர்க்கதரிசியாய் இருப்பான். அந்தி கிறிஸ்துவும் சரி, கள்ளத் தீர்க்கதரிசியும் சரி மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருப்பார்கள்; இந்த கள்ளத் தீர்க்கதரிசி பேசினால் போதுமா? மக்கள் நம்பிவிடுவார்களா? இல்லை, நம்பமாட்டார்கள்; இவன் பல அற்புதங்களை செய்துகாட்ட வேண்டும்; அப்பொழுதுதான் மக்கள் நம்புவார்கள்; எனவே இவன் அற்புதங்களை செய்பவன் என்று வேதம் கூறுகிறது.
     "அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின் மேல் அக்கினியை இறங்கப்பண்ணத் தக்கதாக பெரிய அற்புதங்களைச் செய்யும்படி தனக்கு கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம் போக்கி....வெளி.13:13,14. பொதுவாகவே ஏதாவது அற்புதம் செய்தால்தான் மக்கள் ஒருவனை நம்பக்கூடியவர்களாய் இருக்கிறார்கள். எனவே இந்தக் கள்ளத் தீர்க்கதரிசி வானத்திலிருந்து அக்கினியை இறங்கப் பண்ணி பெரிய அற்புதங்களை செய்வான்; அப்பொழுது பெருவாரியான உலக மக்கள் பிரமிப்படைந்து அவனை நம்புவார்கள் என்று வேதத்தின் மூலம் நாம் அறிகிறோம்.
     உலக சர்வாதிகரியாகிய அந்தி கிறிஸ்துவுக்கு வலது-கை போல் செயல்படும் இவன், அந்தி கிறிஸ்துவை மக்கள் கடவுள் என்று நம்பும்படியாகச் செய்வான்; சர்வாதிகாரியாகிய மிருகத்தின் தோற்றம்போல் உயிருள்ள சிலை போன்றதொன்றை (ரோபோட்) ஏற்படுத்தி அதை பூமியின் குடிகள் வணங்கும்படி செய்லான். அந்தி கிறிஸ்துவின் சிலை பேசத்தக்கதாகவும் தன்னை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும் அந்த அந்தி கிறிஸ்துவின் சிலை உயிருள்ள சிலையாக இருக்கும் என்றும் வேதம் கூறுகிறது.
     "மேலும், அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும் மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங் கொடுக்கப்பட்டது(வெளிப்படுத்தின விசேஷம் 13:15)

** போப் பெனடிக்ட் XVI ஏன் தனது பதவிக்காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்தார்?
வெளிப்படுத்தின விசேஷம் 17:11ல் கூறப்பட்டிருக்கும் ஏழிலிருந்து தோன்றிய எட்டாவதவன்:


 

 தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்ட இறுதிக்கால தீர்க்க தரிசனம்:

இதோ, கோபத்தின் முடிவுகாலத்திலே சம்பவிப்பதை உனக்குத் தெரிவிப்பேன்; இது குறிக்கப்பட்ட முடிவுகாலத்துக்கு அடுத்தது. நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்; ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா; அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது. அவர்களுடைய ராஜ்யபாரத்தின் கடைசிக்காலத்திலோவென்றால், பாதகருடைய பாதகம் நிறைவேறும்போது, மூர்க்க முகமும் சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான். அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினாலல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக்கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான். அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப்பண்ணி, தன் இருதயத்தில் பெருமைகொண்டு, நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான், ஆனாலும் அவன் கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான். சொல்லப்பட்ட இராப்பகல்களின்தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான்.

தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை. 



யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாடு :