Day of the LORD | தேவனுடைய வாக்கின் நியாயத்தீர்ப்பு நாள்

இயேசுவின் வருகையும் நியாயத்தீர்ப்பும்
1.என்றென்றும் தம்மோடு வாழும்படி நம்மை மோட்சத்திற்கு அழைத்துச் செல்ல இயேசு சீக்கிரமாய் வருவார்; அவர் சொன்னதைச் செய்வார். நாம் அவருக்குப் பிரியமாக நம்மை எப்போதும் காத்துக்கொள்வோம்.
2.எக்காளம் தொனிக்கும்போது, இயேசு தூதர்களுடனே மேகங்கள் மேல் வருவார்.
3.அப்போது மரித்துப்போன பரிசுத்தவான்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் பரிசுத்தவான்களும் அவருக்கு எதிர்கொண்டுபோக மறுரூபமாக்கப்பட்டு, மேகங்கள்மேல் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அந்த நாளை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்; அங்கே நமக்கு முடிவில்லாத சந்தோஷம் உண்டு; கைவிடப்பட்டோர் அந்திகிறிஸ்துவினால் துன்பத்துக்குள்ளாவார்கள்.
4.அவர் வரும் வேளையை எவரும் அறியார் என்பதால் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
5.ஒருவரும் கெட்டுப் போகாமல், எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவர் வருகை தாமதமாகிறது; அது வரை பிறர் இரட்சிக்கப்படும்படி, நாமும் இயேசுவைக்குறித்து சொல்லுவோம்.
6.மனந்திரும்பாமல் வாழ்ந்து பாவத்திலே மரித்தோரும், நெருப்பு, தண்ணீர் என்று பல விதங்களில் தற்கொலை செய்துகொண்டவர்களும், உயிரோடெழுந்து நியாயத்தீர்ப்படைவார்கள்; இயேசுவே நியாயாதிபதி. அவர்களைக்குறித்து எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் திறக்கப்படும்; அதன்படியே அவர்கள் நியாயந்தீர்க்கபபட்டு, ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதோர் சாத்தான் இருக்கும் அக்கினிக் கடலில்(நரகத்தில்) தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு விடுதலையும் இல்லை; வேதனைக்கு முடிவும் இல்லை.
ஜெப குறிப்பு:
இயேசுவே,
1.உமது அன்புக்காக ஸ்தோத்திரம்
2.எமக்குக் கொடுத்த சுகம், பெலன், பாதுகாப்புக்காக ஸ்தோத்திரம்.
3.எனது குடும்பத்துக்காகவும், நண்பர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் ஸ்தோத்திரம்
4.எம்மை உமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டதற்காக உமக்கு நன்றி
5.எங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர், எல்லாரும் உமது பிள்ளையாகி, உமது வருகைக்காக ஆயத்தப்பட உதவிச் செய்யும், என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்_ஆமென்.

 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
And, behold, I come quickly; and my reward is with me, to give every man according as his work shall be.
 I am Alpha and Omega, the beginning and the end, the first and the last.
   
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
[வெளி 22:12-14]
Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city.
[Rev 22:12-14]
இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.
(வெளி 16:15) 
Behold, I come as a thief. Blessed is he that watcheth, and keepeth his garments, lest he walk naked, and they see his shame.
(Rev 16:15)

 
ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.
I கொரிந்தியர் 16:22
If any man love not the Lord Jesus Christ, let him be Anathema Maranatha. 
I Corinthians 16:22 
     வர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.

  பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும்,

  அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
 
   இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
[ II பேதுரு 3:4-7 ]
     And saying, Where is the promise of his coming? for since the fathers fell asleep, all things continue as they were from the beginning of the creation.

 For this they willingly are ignorant of, that by the word of God the heavens were of old, and the earth standing out of the water and in the water:

 Whereby the world that then was, being overflowed with water, perished:


 But the heavens and the earth, which are now, by the same word are kept in store, reserved unto fire against the day of judgment and perdition of ungodly men.
[ II Peter 3:4-7 ]

கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.
[ II பேதுரு 3:10 ]
 But the day of the Lord will come as a thief in the night; in the which the heavens shall pass away with a great noise, and the elements shall melt with fervent heat, the earth also and the works that are therein shall be burned up.
[ II Peter 3:10 ]
 
 தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.
மேலும் நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; 
[ II பேதுரு 3:12-15 ]

 சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
  நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற் போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான் நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய். 
[ எசேக்கியேல் 3:18,19 ]

Looking for and hasting unto the coming of the day of God, wherein the heavens being on fire shall be dissolved, and the elements shall melt with fervent heat? Nevertheless we, according to his promise, look for new heavens and a new earth, wherein dwelleth righteousness. Wherefore, beloved, seeing that ye look for such things, be diligent that ye may be found of him in peace, without spot, and blameless.
 And account that the longsuffering of our Lord is salvation; 
[ II Peter 3:12-15a ]

 When I say unto the wicked, Thou shalt surely die; and thou givest him not warning, nor speakest to warn the wicked from his wicked way, to save his life; the same wicked man shall die in his iniquity; but his blood will I require at thine hand.
 Yet if thou warn the wicked, and he turn not from his wickedness, nor from his wicked way, he shall die in his iniquity; but thou hast delivered thy soul.
[ Ezekiel 3:18,19 ]

மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 12:36)
But I say unto you, That every idle word that men shall speak, they shall give account thereof in the day of judgment.
(Matthew 12:36)

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
(எபிரெயர் 10:26,27)
For if we sin wilfully after that we have received the knowledge of the truth, there remaineth no more sacrifice for sins, But a certain fearful looking for of judgment and fiery indignation, which shall devour the adversaries.
(Hebrews 10:26,27)




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.